கேரளத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்தும், ஜனவரி.2 வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என உத்தரவு விடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒமிக்ரான் வைரஸ்பரவி வரும் நிலையில், பல மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கேரள அரசு இன்று வெளியிட்ட உத்தரவில், கேரளத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடைவிதித்தும், டிசம்பர் 30 முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நாள்களில் இரவு 10 மணி வரை மட்டுமே உணவகங்கள், கேளிக்கை விடுதிகள், மதுபானக் கூடங்கள் செயல்படும் வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.