திருச்சூர், ஜுன் 15- புதிய தாராளமயக் கொள்கை களுக்கு எதிரான போராட்டத்துடன் மோடியின் வகுப்புவாதம், வெறுப்புப் புல்டோசரைத் தடுக்க தொழிலாளர் களும், பொதுமக்களும் ஒன்றுபட வேண் டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தா ராம் யெச்சூரி கூறினார். திருச்சூரில் செவ்வாயன்று (ஜுன் 14) நடந்த இஎம்எஸ் நினைவு கருந்த ரங்கில் பங்கேற்ற அவர் மேலும் பேசியதாவது: போராட்டங்கள் தீவிரமடையும் போது, இனவாதமும், வகுப்புவாத பிளவுகளும் இதர வெறுப்பு துருப்பு சீட்டுகளும் இறக்கி விடப்படும். பெரும் பாலும் பிரதமர் அமைதியாக இருக் கிறார். இந்தியா ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாக மாறியதால், அண்டை நாடுகளுடனான நமது உறவு சீர்குலைந்தது. நாட்டில் புதிய தாராள மயக் கொள்கைகளின் ஒரு பகுதியாக கார்ப்பரேட் நிறுவனங்களும் ஆட்சி யாளர்களும் கைகோர்த்து வருகின்ற னர். பொய்களை உண்மை போல் பரப்பி நிஜ வாழ்க்கை பிரச்சனைகளில் இருந்து திசை திருப்புகிறது. கார்ப்ப ரேட் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக் கும் வாய்ப்பை அரசு உருவாக்கி வரு கிறது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கார்ப்ப ரேட் நிறுவனங்களால் கட்டுப்படுத்தப் படுகிறது. நிலக்கரி இறக்குமதியில் அதா னியின் ஈடுபாடு கோவிட் காலத்தில் அறிவிக்கப்பட்ட ஊக்கத் திட்டங்கள் அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங் களுக்குச் சாதகமாக இருந்தன. இன்று நாட்டின் மொத்த தேசிய வருமானத்தில் 57 சதவிகிதத்தை 10 பில்லியனர்கள் வைத்துள்ளனர். அதே சமயம் 50 சத விகிதம் இந்திய மக்களின் மொத்த வரு வாய் என்பது, தேசிய வருவாயில் 13 சத விகிதம் மட்டுமே. வறுமைக் கோட்டு க்குக் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை 62 மில்லியனில் (6.20 கோடி) இருந்து 132 மில்லியனாக (13.2கோடி) அதிகரித்துள்ளது. இந்நிலையில் தொழிலாளர்களின் எதிர்ப்பும், ஒற்றுமையும் அதிகரித்து வரு கிறது. ஆனால், அது அரசியல் போராட்டங் களாக வளராமல் தடுக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் முயற்சி செய்யும். அதற்கு இனம் மற்றும் வகுப்புவாதம் பயன்படுத்தப்படும். வரலாற்றுச் சிறப்பு மிக்க விவசாயிகள் போராட்டத்திற்குப் பிறகு நடந்த தேர்தலில் வகுப்புவாத அணிதிரட்டல் மூலம் மோடியால் வெற்றி பெற முடிந்தது. அரசை விமர்சிப்ப வர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார் கள். யுஏபிஏ வழக்குகள் 76 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஆனால் தண்டனை இரண்டு சதவிகிதம் மட்டுமே. அரசியல் சாசனத்தால் உருவாக்கப்பட்ட சட்டங் கள் அனைத்துப் பகுதிகளிலும் மீறப்படு கின்றன. கூட்டாட்சி முறை சிதைந்து கொண்டி ருக்கிறது. மாநிலங்களின் பொருளா தாரம் வெட்டப்படுகிறது. எதிர்க்கட்சி அர சியல் தலைவர்களை வேட்டையாட அம லாக்க இயக்குநரகம் உள்ளிட்ட புலனா ய்வு அமைப்புகளைப் பயன்படுத்துவ தாகவும் அவர் கூறினார்.