states

img

காப்பகத்தில் இருந்து காணாமல் போன 6 சிறுமிகள் மீட்பு; 2 இளைஞர்கள் கைது

கோழிக்கோடு, ஜன.30- கேரள மாநிலம் கோழிக் கோடு வெள்ளிமாடுகுந்நில் உள்ள சிறுமியர் காப்பகத்தில்  இருந்து காணாமல் போன 6 சிறுமி கள் மீட்கப்பட்டனர். பெங்களூரு வில் சிறுமிகளை தவறாக பயன் படுத்த முயன்ற 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். ஜனவரி 26 அன்று இரவு கோழிக்கோடு வெள்ளிமாடு குந்நு சிறுமியர் இல்லத்திலிருந்து 6 சிறுமிகள் தப்பிச் சென்றனர். 15  முதல் 17 வயதுக்குட்பட்ட இந்த சிறுமிகள் கோழிக்கோட்டில்  இருந்து பாலக்காடு சென்று பெங் களூருவுக்கு பேருந்தில் சென்ற னர். பெங்களூரு ஒயிட்பீல்டு ரயில் நிலையத்தை அடைந்த னர். ரயிலில் சக பயணிகளாக இருந்த இரண்டு இளைஞர்கள் சிறுமிகள் தனியாக இருப்பதை உணர்ந்து பின்தொடர்ந்தனர். தாங்கள் கோவா செல்ல வந்த தாக சிறுமிகள் தெரிவித்தனர். நட்பாக பழகிய வாலிபர்கள், ஓய் வெடுக்கவும், குளிக்கவும் அறை தருவதாக கூறி சிறுமிகளை மடி வாளத்துக்கு அழைத்துச் சென்ற னர். ஓட்டலில் இருந்து உணவு வாங்கி சிறுமிகளுக்கு கொடுத் துள்ளனர். பின்னர் சிறுமிகளை ஒரு அறையில் வைத்துவிட்டு இரு வரும் வெளியே சென்றனர்.

மது பானம், சிகரெட் போன்றவற்று டன் திரும்பி வந்தவர்கள் சிறுமி களுக்கு கொடுக்க முயன்றனர். ஏற்கனவே குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஒரு சிறுமி மட்டும் இளைஞர்களுடன் சேர்ந்து குடித் துள்ளார். அப்போது அந்த இளை ஞர்கள் அந்த சிறுமியிடம் பாலி யல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். மற்ற சிறுமிகள் எதிர்ப்பு தெரி வித்து அலறியபடி அங்கிருந்து ஓடினர். அதைப்பார்த்த உள்ளூர் வாசிகளும் ஓட்டல் ஊழியர்களும் குடிபோதையில் இருந்த சிறுமி யை மீட்டதுடன் வாலிபர்களை யும் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். தப்பிச் சென்ற சிறுமிகளில் ஒருவர் மாண்டியா விலும், நான்கு பேர் எடகராவிலும்  பிடிபட்டனர். சிறுமிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படை யில் சேவாயூர் காவல்துறையினர் இளைஞர்கள் இருவரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கொல்லத்தைச் சேர்ந்த டாம் தாமஸ் (24), கொடுங்கல்லூரைச் சேர்ந்த பேபின் ரபி (25) என்பது தெரியவந்தது. சனிக்கிழமை மாலை சேவாயூர் காவல் நிலை யத்தில் இருந்து பேபின் ரபி தப்பி ஓடினார். ஆனால் இரண்டு மணி நேரத்தில் பிடிபட்டார். இருவரும் கோழிக்கோடு ஜூடிசியல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன் றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டனர். காப்ப கத்தில் இருந்து சிறுமிகள் வெளி யேறிய பின்னணி குறித்தும் அவர் களுக்கு பணம் கொடுத்து உத விய நபர் குறித்தும் காவல்துறை யினர் விசாரணை நடத்தி வரு கின்றனர்.