states

img

மோடியும் அதானியும் இணைந்து நடத்தியது இந்தியா இதுவரை கண்டிராத மிகப்பெரிய ஊழல்

திருவனந்தபுரம், ஜன.31 - இந்தியா கண்டிராத மிகப்பெரிய ஊழலை மோடியும், அதானியும் இணைந்து செய்துவிட்டனர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி கூறினார்.  அதானி என்றால் மோடியேதான், அதற்கு மேலும் விளக்கம் தேவை யில்லை. 2014 இல் மோடி ஆட்சிக்கு வந்ததும் அதானியின் வளர்ச்சி தொடங்கியது என எம்.ஏ.பேபி தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், “அதானி வளர்ந்து வளர்ந்து உலகின் மூன்றாவது பெரிய  பணக்காரரானார். அதானி நிறுவனப்  பங்குகளின் மதிப்புக் குறைவால் முத லீட்டாளர்களுக்கு ஐந்தரை லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு  ஏற்பட்டுள்ளது. அதானி நிறுவனங் களின் முக்கிய முதலீட்டாளர்களான பாரத ஸ்டேட் வங்கிக்கும், லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுக்கும் பெரும் நஷ்டம் ஏற்படும் என்கின்றனர்

இந்த துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.  இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளமாக விளங்கும் இந்நிறு வனங்களின் சரிவு நமது பொருளா தாரத்தையே ஆட்டம் காணச் செய்யும். இதன் தாக்கத்தை தொழிலாளர்களும் ஏழைகளும் சுமக்க நேரிடும். அவர்கள் ஊதியம் மட்டுமின்றி, நிவாரண நட வடிக்கைகளையும் இழக்க வேண்டி நேரிடும். அதானியை நடுங்க வைத்த ஹிண்டன்பர்க் ஆய்வு திங்களன்று  அதானிக்கு அளித்த பதிலில், “தேசத்தை திட்டமிட்டு சூறையாடும் அதேவேளையில், இந்தியக் கொடி யைப் போர்த்திக் கொண்டிருக்கும் அதானி குழுமத்தால் இந்தியாவின் எதிர்காலம் பின்னுக்குத் தள்ளப்படு வதாக நாங்களும் நம்புகிறோம்” என  கூறப்பட்டுள்ளது. அதானியும் மோடி யும் சமம், மோடியும் கொள்ளையும் சமம்” என்றும் எம்.ஏ.பேபி குறிப்பிட்டுள்ளார்.