states

img

கோழிக்கோடு மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

கோழிக்கோடு, செப்.14- கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் “நிபா” வைரஸ் மித மான வேகத்தில் பரவி வருகிறது. ஆட்கொல்லி வைரஸான இந்த “நிபா” வைரஸ் பாதிப்பு காரண மாக 2 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 5 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. 706 பேர் நோய்த்தொற்று உள்ளவர்களிடம் தொடர்புடைய நபர்களாக கண்ட றியப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோழிக்கோடு மாவட்டத்தில் கேரள மாநில சுகாதாரத்துறை தடுப்பு நட வடிக்கைகளில் தீவிரமாக ஈடு பட்டு வருகின்றனர். கோழிக்கோடு மாவட்டத்தில் 7 ஊராட்சிகளில் 43  வார்டுகள் நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளாகவும், தனிமைப்படுத்தப் பட்ட பகுதிகளாகவும் அறிவிக்கப் பட்டு உள்ளது.  இந்நிலையில், நிபா  வைரஸ் எதிரொலியாக கோழிக் கோடு மாவட்டத்தில் உள்ள கல்வி நிறு வனங்களுக்கு மறுஅறிவிப்பு வரும் வரை விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.