கொச்சி, மே 19- கேரளத்தில் 42 உள்ளாட்சி வார்டுகளுக்கு நடந்த இடைத் தேர்தல்களில் எல்டிஎப் 24 வார்டு களை கைப்பற்றி வெற்றிவாகை சூடியுள்ளது. இதில் 9 இடங்கள் பிற கட்சிகளிடமிருந்து கைப்பற்றி யவையாகும். யுடிஎப் 12, பாஜக 6 இடங்களில் வெற்றி பெற்றன. தேர்தல் நடைபெற்ற இடங் களில் 20 மட்டுமே இடது முன்னணி யிடம் இருந்தவை. அது தற் போது 24 ஆக அதிகரித்துள்ளது. 16 வார்டுகள் இருந்த யுடிஎப் 4 வார்டு களை இழந்துள்ளது. பாஜக முன்பு இருந்த அதே எண்ணிக்கையை தக்கவைத்துள்ளது. எல்டிஎப் புதி தாக கைப்பற்றிய 9 வார்டுகளில் 7 வார்டுகள் யுடிஎப்பிடமும் 2 வார்டுகள் பாஜகவிடமும் இருந்த வையாகும். எல்டிஎப்பிடமிருந்து 3 வார்டுகளை யுடிஎப்பும், 2 வார்டு களை பாஜகவும் கைப்பற்றின.
பல்வேறு இடங்களில் யுடிஎப்பும் பாஜகவும் இதர வகுப்பு வாத அமைப்புகளுடன் மறைமுக கூட்டணியை ஏற்படுத்தி வாக்கு களை மடைமாற்றம் செய்தன. திரு வனந்தபுரம் மாவட்டத்தில் 4 வார்டுகளுக்கு நடந்த தேர்தலில் எல்டிஎப்பும் யுடிஎப்பும் தலா 2 இடங்களில் வெற்றி பெற்றன. கொல்லம் மாவட்டத்தில் தேர்தல் நடந்த ஆறில் ஐந்து வார்டுகளில் எல்டிஎப் வெற்றி வாகை சூடியது. இங்கு காங்கிரஸிடமிருந்து 2, பாஜகவிடமிருந்து 1 வார்டை எல்டிஎப் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சியின் வார்டு உறுப்பினர் ராஜிநாமா செய்த தைத் தொடர்ந்து தேர்தல் நடை பெற்ற பெரிநாடு பஞ்சாயத்து நாந்திரிக்கல் வார்டில் எல்டிஎப் வேட்பாளர் பிந்துமோள் 365 வாக்குகள் பெரும்பான்மையுடன் பெற்றி பெற்றார்.
இங்கு எல்டிஎப் 703 வாக்குகளும் யுடிஎப் 338, பாஜக 44 வாக்குகளும் பெற்றன. பாஜகவின் பொருளா தார, வகுப்புவாத கொள்கை களை எதிர்த்தும் கேரளத்தின் வளர்ச்சிக்கான போராட்டங்களை யும் எல்டிஎப் முன்னெடுக்கும் போது அதற்கு மாறான சந்தர்ப்ப வாத வலதுசாரி அரசியலை யுடிஎப் முன்னிறுத்துகிறது. அரசியல் விழிப்புணர்வு மிக்க வாக்காளர்கள் மத்தியில் இதன்மூலம் தனது செல்வாக்கை யுடிஎப் இழந்து வரு கிறது. உள்ளாட்சி இடைத்தேர்தல் முடிவுகளும் அதையே சுட்டிக்காட்டுகின்றன. தேர்தல் முடிவு குறித்து சிபிஎம் கேரள மாநில செயற்குழு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கேர ளத்தின் வளர்ச்சியை தடுப்பதற் கான யுடிஎப் பாஜக நகர்வுக்கு எதிரான மக்கள் தீர்ப்பே இந்த தேர்தல் முடிவு’ என தெரிவிக்கப் பட்டுள்ளது.