states

img

நாடாளுமன்ற தேர்தல்-2024

திருவனந்தபுரம், பிப்.27- கேரளத்தில் மக்களவை தேர்தலுக்கான இடது ஜனநாயக முன்னணியின் தொகுதிப் பங்கீடு நிறைவடைந்து 20 தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்

மொத்தமுள்ள 20 இடங்களில், இடது ஜனநாயக முன்னணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 15 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 இடங்களிலும், கேரள காங்கிரஸ் (எம்) ஒரு இடத்திலும் போட்டியிடுகின்றன.

சிபிஎம் வேட்பாளர்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் செவ்வாயன்று (பிப்.27) அறிவித்தார். இதில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஏ.விஜய ராகவன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.கே.சைலஜா, டி.எம்.தாமஸ் ஐசக், எளமரம் கரீம், கே.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆற்றிங்கல்- வி.ஜோய், கொல்லம் - திரைக்கலைஞர் எம்.முகேஷ், பத்தனம்திட்டை - டாக்டர் டி.எம்.தாமஸ் ஐசக், ஆலப்புழா - ஏ.எம்.ஆரிப், இடுக்கி - ஜோய்ஸ் ஜார்ஜ், எர்ணாகுளம் - கே.ஜே.ஷைன், சாலக்குடி - பி.ரவீந்திரநாத், ஆலாத்தூர் - கே.ராதாகிருஷ்ணன், பாலக்காடு -  ஏ.விஜயராகவன், மலப்புறம் - வி.வசிப், பொன்னானி - கே.எஸ்.ஹம்சா, கோழிக்கோடு - எளமரம் கரீம், வடகரா - கே.கே.சைலஜா, கண்ணூர் - எம்.வி.ஜெயராஜன், காசர்கோடு- எம்.வி.பாலகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

சிபிஐ வேட்பாளர்கள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 இடங்கள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன. அதன்படி வயநாட்டில் ஆனிராஜா, திருவனந்தபுரத்தில் பன்னியன் ரவீந்திரன், திருச்சூரில் வி.எஸ்.சுனில்குமார், மாவேலிக்கரை யில் சி.ஏ.அருண்குமார் ஆகியோர்   வேட்பாளர்களாக கட்சியின் மாநில செயலாளர் பினோய் விஸ்வம் திங்களன்று (பிப்.26) அறிவித்தார்.

கேரள காங்கிரஸ்(எம்)
கோட்டயம் தொகுதி, கேரளா காங்கிரஸ்(எம்)க்கு ஒதுக்கீடு  செய்யப்பட்டு வேட்பாளராக தாமஸ் சாழிக்காடன் அறிவிக்கப்பட்டுள்ளார்.