திருவனந்தபுரம், டிச.30- ஒன்றிய அரசின் சமீபத்திய நல்லாட்சி குறியீட்டின் (ஜிஜிஐ) படி, சிறந்த ஆட்சி நடைபெறும் ஐந்து மாநி லங்களில் கேரளாவும் ஒன்று. பதினெட்டு மாநிலங்கள் பட்டிய லில் இடம் பெற்றுள்ளன. கேரளா ஐந்தா வது இடத்தில் உள்ளது. தென் மாநி லங்களின் பட்டியலில் கேரளம் முத லிடம் பிடித்தது. இந்த பட்டியலை நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொது மக்கள் குறைதீர்க்கும் துறை வெளி யிட்டுள்ளது. 2019 அறிக்கையில், கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநி லங்களை பின்னுக்கு தள்ளி கேரளம் முன்னிலை பெற்றது. கேரளாவின் எளிதாக தொழில் தொடங்குவதற்கான மதிப்பெண் 44.82இல் இருந்து 85 ஆக அதிகரித்துள் ளது.
பஞ்சாப் தவிர கேரளா மட்டுமே நிலையை மேம்படுத்தியது. தொழில்துறையின் ஒருங்கிணைந்த வருடாந்திர வளர்ச்சி விகிதம் 2019 இல் ஒன்று என்பதிலிருந்து 2021 இல் 7.91 ஆக உயர்ந்துள்ளது. மனித வள மேம்பாடு, திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு விகிதம் ஆகியவற்றிலும் கேரளா தனது மதிப்பெண்ணை மேம்படுத்தியுள்ளது. பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகளில் கேரளா முதலிடத்தில் உள்ளது. நீதித்துறை மற்றும் பொது பாதுகாப்பு பிரிவுகளில் இரண்டாவது இடத்தையும், சமூக நல மேம்பாட்டு பிரிவில் மூன்றாவது இடத்தையும் பிடித்தது.