திருவனந்தபுரம், ஜன. 1- கேரள தொடர் ஆட்சியின் மூலம் புதிய சரித்திரம் படைத்த எல்.டி.எப் அரசு, கடந்த 6 மாதங்களில் செய்த தனித்துவமான சாத னைகளுடன் புத்தாண்டில் சிறகு விரிக்கிறது. அரசு நிர்வாகம், நலன் மற்றும் வளர்ச்சித் திட்டங்களில் புதிய முன்னேற்றங்களைப் படைத்து வருகிறது. ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆன நிலையில், செயல்படுத்தப் பட்டு வரும் 60 முக்கியத் திட்டங்கள் குறித்த துண்டுப் பிரசுரமும் அரசு வெளியிட்டுள்ளது. உட்கட்டமைப்புத் துறையில் வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர் பார்க்கப்படும் கே.ரயில் சில்வர்லைன் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு தொ டங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசி யல் விரோதப் போராட்டங்களை மக்கள் நிரா கரித்தனர். விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் கட்டுவதற்கான கவுண்டவுன் விதிக்கப் பட்டுள்ளது. கண்ணூர் விமான நிலை யத்தில் சரக்கு போக்குவரத்து தொடங்கியது.
கோவிட் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உற வினர்களுக்கு உதவித் தொகை அறிவிக் கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தர வையடுத்து, ஒன்றிய அரசு அறிவித்த ரூ.5000 ,13ஆயிரம் பேருக்கு வழங்கப்படும். கோவிட் மூடல் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சிறு-குறு வணிகத் துறையிலும் ஏற்றம் கண்டது. ஆட்சி, தொழில்துறை, மருத்துவத் துறை ஆகியவற்றில் கேரளத்தை முன்னி லைப்படுத்துதல். பொதுப்பணித் துறை யில் பொதுத் திட்டங்களைச்செயல் படுத்துதல். பொதுமக்களுக்கு ஓய்வு இல்லங்கள் திறக்கப்பட்டது. புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது. கூட்டுறவுத் துறையில் விரைவான பரிமாற்றத்துக்கு 29 இளைஞர் குழுக்கள். பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேளாண், பால்வளத் துறையில் மாற்றங்கள் காணப்படுகின்றன. கோவிட் காலத்தில் கூட, பொதுக் கல்வித் துறை மாணவ மாணவிகளை அரவணைத்துக் கொண்டது. மக்கள் மீது கூடுதல் அக்கறையுடன் அரசு முன்னேறி வரும் நிலையில், அரசுக்கு ஆதரவாக மக்கள் இருப்பதை உள்ளாட்சி இடைத்தேர்தல்கள் வெற்றி பிரகடனம் செய்துள்ளது.