states

img

10 லட்சம் வீடுகளுக்கு புத்தகங்கள் வழங்கும் கேரள அரசு

திருவனந்தபுரம், மார்ச் 7 - நூலக இயக்கத்தை ஊக்கப் படுத்துவதற்கான திட்டங்கள் மற்றும் உத்தரவுகளுடன் கேரள மாநில நூலகப் பேரவை பட்ஜெட் தயாரிக்கப் பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளில் 10  லட்சம் வீடுகளுக்கு புத்தகம் வழங்கும் ‘வீட்டுக்கு வீடு’ திட்டம் செயல்படுத்தப் படும்.  நூலக கவுன்சில் கூட்டத்தில்,  மாநில துணைத் தலைவர் ஏ.பி.ஜெயன், 122.45 கோடி ரூபாய் வருவாய் மற்றும் அதே அளவு செல வாகும் என எதிர்பார்க்கப்படும் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

கேரளத்தில் உள்ள அனைத்து நூலகங்களின் செயலாளர்கள் மற்றும் நூலகர்களுக்கு விபத்து  காப்பீடு வழங்கப்படும். நூலகங் களின் தரம் பாராமல் நூலகர் உத வித்தொகையை ஒருங்கிணைக்க வும், ஏ.பிளஸ், ஏ, பி, சி கிரேடு நூலகங் களில் உள்ள நூலகர்களின் உதவித் தொகையை ரூ.2 ஆயிரமாக உயர்த்த வும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து நூலகங்களிலும் எம்எல்ஏ  நிதி மற்றும் சிஎஸ்ஆர் நிதி மூலம் நேரடியாக கவுன்சில் மூலம் கணினி கள் வழங்கப்படும். நூலகங்களில் டிஜிட்டல் மயமாக்கல் அமல்படுத்த ப்படும். மாநில பொது நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம் டிஜிட்டல் மய மாக்கப்படும். மாநில நூலக பேரவை யின் கீழ் கோழிக்கோடு உரூப் அருங்காட்சியகம் புதுப்பிக்கப்படும்.

நூலகங்களுக்கான ஆண்டு மானியம் அதிகரிக்கப்படும். எபிளஸ், ஏ, பி மற்றும் சி கிரேடுகளில் உள்ள  நூலகங்களுக்கு சிறப்பு நிதி அனு மதிக்கப்படும். எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாண வர்களுக்கு, நூலகங்களில் வழி காட்டுதல் வகுப்பு நடத்தப்படும். மூத்த  குடிமக்கள் சங்கமாக மகிழ்ச்சி மன்றம் உருவாக்கப்படும். இளம் எழுத்தாளர்களுக்கான கலாச்சார விழா, எழுத்துக் குழு என  பல திட்டங்கள் பட்ஜெட்டில் உள்ளன.

சிறைச்சாலைகள், சிறுவர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங் கள் ஆகியவற்றில் உள்ள நூலகங் களுக்கு சிறப்பு மானியம் ஒதுக்கீடு செய்வதற்கும் பணம் ஒதுக்கப்பட்டுள் ளது. மாநில நூலகப் பேரவைத் தலை வர் டாக்டர்.கே.வி.குஞ்ஞுகிருஷ் ணன், செயலர் வி.கே.மது, இணைச் செயலர் மனையத் சந்திரன் உள்ளிட் டோர் பேசினர். விவாதங்களுக்குப் பிறகு பட்ஜெட் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது.