states

img

மதுவின் குடும்பத்துக்கு துணை நிற்கும் கேரள அரசு

பாலக்காடு, ஏப். 4- அட்டப்பாடி சிந்தக்கி பழங்குடியின இளைஞர் மது அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 16 பேரில் 14 பேர் குற்றவாளிகள் என  மன்னார்க்காடு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 2018 பிப்ரவரி 22 அன்று மது கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 16 பேர் குற்றவாளிகள். இரண்டு பேரைகுற்றவாளிகள் இல்லை என்று நீதிமன்றம் கண்டறிந்து அவர்களை விடுதலை செய்தது. ஒரு  நபர் மீது சாதாரண குற்றச்சாட்டு பதிவு செய்யப் பட்டது. மீதமுள்ள 13 பேர் பட்டியல் சாதி வன்கொடு மைச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் எனக் கண்ட றியப்பட்டு புதன்கிழமை தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டது. அவர்கள் கிளை சிறைக்கு கொண்டு செல்லப் பட்டனர். மிகக் குறுகிய காலத்தில் விசாரணையை முடித்துக் கொள்ளும் வழக்கு என்ற பெருமை யும் மது வழக்குக்கு உண்டு. குற்றம் சாட்டப்பட்ட வர்களுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என்று  சிறப்பு வழக்கறிஞர் ராஜேஷ் எம் மேனன் தெரிவித்தார். இந்த தீர்ப்பால் மதுவின் குடும்பத்தின ரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மதுவின் கொலைக்குப் பிறகு, குற்றவாளிகளுக்கு தண்டனை யை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளை யும் மாநில அரசு தொடர்ந்தது.

மது கொலைக்குப் பிறகு, முதல்வர் பினராயி விஜயன் மதுவின் வீட்டுக்கு சென்று குடும்பத்தின ருக்கு ஆறுதல் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய மாநிலச் செயலாளர் கொடி யேரி பாலகிருஷ்ணன், அமைச்சர் ஏ.கே.பாலன் ஆகி யோரும் மதுவின் குடும்பத்தினரை சந்தித்து நீதியும் நிவாரணமும் பெற்றுத் தருவதாக உறுதியளித்த னர். அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை காப்பா ற்றியது. இந்த வழக்கில் எந்த தலையீடும் இல்லாமல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை உறுதி செய்ய அரசு முயற்சித்துள்ளது. முதலில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் வழக்கை எடுக்காமல் வாபஸ் பெற்றபோது, உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டனர். இது மதுவின் குடும்பத்தினரின் கருத்தையும் கருத்தில் கொண்டு செய்யப்பட்டது.

ஆனால், 127 சாட்சிகளில் 24 பேர் ஆஜராகி பிறழ்சாட்சியம் அளித்தனர். இது வழக்கை மோசமாக பாதிக்கும் என்று தெரிந்ததும், வழக்கறிஞரை மாற்ற வேண்டும் என்று மதுவின் குடும்பத்தினர் அரசை கேட்டுக் கொண்டனர். அதை பரிசீலித்து உதவி வழக்கறிஞரான ராஜேஷ் எம்.மேனன் உடனடியாக சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை அவர்தான் ஆஜரானார். சாட்சிகளின் தவறை கண்டறிய காவல்துறையின் தலையீடும் பாராட்டுக்குரியதாக அமைந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை கீழமை நீதிமன்றம் ரத்து செய்த வழக்கத்திற்கு மாறான சம்பவத்தையும் மது  வழக்கில் கண்டது. சாட்சிகள் செல்வாக்கு செலுத்தப் பட்டது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. அகளி டி.எஸ்.பி என்.முரளிதரன் தலைமையிலான இடைவிடாத விசாரணையில் சாட்சிகள் பணம் மற்றும் மிரட்டல்களைப் பயன் படுத்தி ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. இதை யடுத்து, குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. குற்றவாளிகள் 11 பேரின் ஜாமீன் ரத்து செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஜாமீன் கோரி அவர்கள் மீண்டும் உயர் நீதிமன்றத்தை அணுகினர், ஆனால் விசாரணை நீதிமன்றத்திற்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.