கோழிக்கோடு, ஏப். 1-
தில்லியில் மார்ச் 31 ஞாயிறன்று நடைபெற்ற இந்தியா கூட்டணியின் பேரணி தேர்தல் களத்தில் மிகவும் முக்கியமானது என்றும் பேரணியில் அதிகமான மக்கள் கலந்து கொண்டது பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிரான கடும் எச்சரிக்கை என்றும் முதல்வர் பினராயி விஜயன் கூறினார். மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக கோழிக்கோடு வந்த முதல்வர் திங்களன்று செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:
எதிர்க்கட்சித் தலைவர்கள் மற் றும் தங்களுக்கு எதிராக நிற்கும் ஊழியர்களை நாடு முழுவதும் வேட்டையாடும் நடவடிக்கையை பாஜக மேற்கொண்டு வருகிறது. கெஜ்ரிவால் கைதில் இப்போது காங்கிரஸ் மேற்கொண்டுள்ள நிலைப்பாடு வரவேற்கத்தக்கது.
மார்ச் 31 அன்று பேரணி பாஜகவுக்கு எச்சரிக்கையாக அமைந்தது. மோடி அரசு ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகளில் நாட்டின் அனைத்து விழுமியங்களையும் அழித்துவிட் டது. மதச்சார்பின்மையை அங்கீ கரிக்காத ஆர்எஸ்எஸ் தலைமையி லான பாஜக ஆட்சியில் உள்ளது. அரசமைப்பு விழுமியங்கள் சிதைக் கப்படுகின்றன.
ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துவதில் ஆர் வம் காட்டுகின்றனர். ஆர்எஸ்எஸ்-க்கு இது முக்கியமான காலகட்டம். அந்த அமைப்பின் நூற்றாண்டு வரப்போகிறது. ஆர்எஸ்எஸ் செயல்திட்டத்தை கூடிய விரை வில் செயல்படுத்துவதே பாஜக வின் நோக்கம். குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்டவை அதன் ஒரு பகுதியாகும்.
வகுப்புவாதத்தை எதிர்ப்ப தன் மூலம் மட்டுமே மதச்சார்பி னமையை பாதுகாக்க முடியும். நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் கவலையுடனும் அச்சத்து டனும் சிந்திக்கும் ஒன்று குடி யுரிமை திருத்தச் சட்டம். இது நாட் டில் ஏற்படுத்தும் தாக்கம் மிகப்பெரி யதாக இருக்கும். இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.