திருமணம், சொத்துரிமை உள்ளிட்ட நடைமுறைகளில் அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியான சட்டமான பொது சிவில் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
நாட்டில் உள்ள பல்வேறு மதங்கள் பின்பற்றி வரும் திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், சொத்துரிமை உள்ளிட்ட நடைமுறைகளுக்கு பதிலாக எல்லோருக்கும் ஒரே மாதிரியான சட்டமான பொது சிவில் சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று பாஜக அரசு பல ஆண்டுகளாக முயன்று வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று பொது சிவில் சட்ட முன்முடிவை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையில், தீர்மானம் ஒன்ரை கேரள முதலவர் பினராயி விஜயன தாக்கல் செய்தார். இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் முடிந்த நிலையில், இத்தீர்மானம் ஒருமனதாக கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.