சபரிமலையில் மகர விளக்கு காலத்தில் சாலைப் பாது காப்பை மேம்படுத்த மாநில மோட்டார் வாகனத் துறை (எம்விடி) செயல் படுத்தியுள்ள திட்டம் நாட்டிலேயே சிறந்தது என்று ஆய்வு அறிக்கை கூறுகிறது.
உலக வங்கியும், சேவ் லைஃப் பவுண்டே ஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவை ஒட்டுமொத்த நாட்டிற்கும் முன்னுதாரணமாகத் திகழ முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் சாலைப் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப் பயன்படும் அறிக்கையை ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி வெளியிட்டார். எம்.வி.டி.,யால் செயல்படுத்தப்பட்ட திட்டத்தின் மூலம், சபரிமலை வழித்தடத்தில் சாலை விபத்து கள் வெகுவாக குறைந்து, இறப்பு விகிதம் பூஜ்ஜியமாக மாறியுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. உத்தரகண்டின் சார் தாம் யாத்திரை போன்ற விபத்து மரணங்கள் அதிகம் நடக்கும் இடங்களில் சபரிமலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.
எம்விடி திட்டம் சரியான திட்டமிடலு டன் செயல்படுத்தப்பட்டதாக அறிக்கை கூறுகிறது. அவர்களில், தலா 45 பேர் கொண்ட 15 ரோந்துக் குழுக்கள் வழித்தடத் தில் நிறுத்தப்பட்டுள்ளன. வாகனங்களில் ஜிபிஎஸ், வயர்லெஸ், தீயை அணைக்கும் கருவிகள் மற்றும் பிற பாதுகாப்பு சாத னங்களும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை சேவைக ளும் வழங்கப்படுகின்றன. இவை அனைத் தும் பார்க்கிங் போன்றவற்றை எளிதாக்கி யதுடன் விபத்துகளும் குறைந்துள்ளன.
2009-2010 சபரிமலை பயண விபத்து களில் 16 பேர் இறந்தனர், 77 பேர் காயமடைந்த னர். மலைப் பகுதிகளில் உள்ள குறுகிய சாலைகள் வழியாக மட்டுமே கோயிலுக்குச் செல்ல முடியும் என்பதால், சாலை விபத்து கள் அல்லது வாகனங்கள் பழுதடைவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மீட்புப் பணிகளுக்காக மற்ற வாகனங்கள் இந்த வழியாக வேகமாக செல்ல முடியாது. எம்விடி மதிப்பீட்டின்படி, 2017-2018 ஆம் ஆண்டில், சுமார் நான்கு கோடி பயணிகள் 80 லட்சம் வாகனங்களில் பயணம்செய்துள்ளனர்.
அதை தொடர்ந்து சபரிமலைக்கு செல்லும் 382 கி.மீ சாலையை பாதுகாப்பான மண்டல திட்டமாக மாற்ற எம்விடி திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக 2020-2021 இல் இறப்பு விகிதம் 100சதவிகிதம் குறைக்கப்பட்டது. உயிரிழந்தவர்களின் எண் ணிக்கையும் 77ல் இருந்து 7 ஆக குறைந்துள்ளது.
கார்ப்பரேட் ஊடகங்களின் பொய்ப்பிரச்சாரத்திற்கு பதிலடி
அவசர மருத்துவ சேவை வழங்குவதற் காக எம்விடி திட்டத்தின் கீழ் ஆம்புலன்ஸ் சேவையும் உறுதி செய்யப்பட்டது. 300 பேர் கொண்ட 90 பழுது நீக்கும் குழுக்கள் உரு வாக்கப்பட்டுள்ளன. மூன்று நடமாடும் பழுது பார்க்கும் அலகுகள், ஐந்து கிரேன்கள் மற்றும் 50 மீட்பு வேன்கள் கிடைக்கப்பெற்றுள் ளன. இதன் மூலம் வாகனங்கள் பழுதடைந் தால் உடனடியாக உதவி செய்ய முடியும். முடங்கிய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
முக்கிய சோதனைச் சாவடிகள் மற்றும் சுங்கச்சாவடிகளில் ஆறு மொழிகளில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநி யோகிக்கப்பட்டன. நாட்டின் பல்வேறு மாநி லங்களில் செயல்படுத்தப்பட்ட அல்லது தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் 13 சிறந்த திட்டங்களில் சபரிமலை திட்டமும் ஒன்று. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனி யன் பிரதேசங்களின் காவல்துறை, போக்கு வரத்து மற்றும் சுகாதாரத் துறைகள் தொ டர்பாக இந்த அறிக்கை தயாரிக்கப் பட்டுள்ளது.
சபரிமலையில் அடிப்படை வசதிகள் இல்லை என கார்ப்பரேட் ஊடகங்கள் தவ றான பிரச்சாரம் மேற்கொண்டுள்ள பின்னணி யில் இந்த அறிக்கை அந்த பிரச்சாரங்களு க்கு பதிலடியாக அமைந்துள்ளது.
அப்பாவை தவறவிட்ட சிறுவனும் அவதூறு பரப்பிய விஷமிகளும்!
சபரிமலைக்கு சென்றுவிட்டு, தனது தந்தையை காணவில்லை என்று கதறிய சிறுவனின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக இந்த வீடியோவை வைத்து பலரும் அரசியல் செய்து வருகின்றனர். கேரள கம்யூனிஸ்ட் அரசு இந்துக்களை தவறாக நடத்துவதா கவும், அலட்சியப்படுத்துவதாகவும் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோவின் உண்மைத்தன்மை என்ன? உண்மையில் என்ன நடந்தது?
கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந் துள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு, தினசரி பல்லாயிரக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்து வருகின்ற னர். இந்த ஆண்டு வழக்கத்தை விட சிறுவர்கள், குழந்தைகள் அதிகம் தரிசனம் செய்து வருகின்றனர்.
தினமும் 80 ஆயிரம் முதல் 90 ஆயிரம் பக்தர்கள் தரிச னத்திற்கு வருவதால் கூட்டத்தை கட்டுப்படுத்த தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்கிடை யே சிறுவனின் வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவை எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்ட சிலர், சிறுவனை காவல்துறையினர் துன்புறுத்துவது போன்று கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் கேரள அரசு கொடூரமாக நடந்து கொள்வதாகவும் கூறி வருகின்றனர்.
ஆனால், வீடியோவின் உண்மைத்தன்மையை ஆராய்ந்த போது தான் நடந்தது என்ன என்பது தெரிய வந்தது. சபரி மலைக்கு அப்பாவுடன் வந்த மகன், ஒருகட்டத்தில் அப்பாவை காணவில்லை என்று அங்கு பாதுகாப்பு பணியில் உள்ள காவல்துறையினரிடம் சொல்கிறான். அங்கிருந்த காவலர்கள் சிறுவனை சமாதானம் செய்கின்றனர். ஆனால் தொடர்ந்து, கைக் கூப்பியபடி அப்பாவை கண்டுபிடித்துத் தருமாறு சிறுவன் அழுகிறான். அடுத்த சில நிமிடங்களில் அவனது அப்பா அங்கு வந்தவுடன், ‘அப்பா’ என்று நிம்மதிப் பெருமூச்சு விடும் சிறுவன், அங்கிருந்து செல்கையில் காவலர்களுக்கும் போய் வருவதாக கூறிவிட்டுச் செல்கிறான். இவை அனைத்தும் அங்கிருந்த ஒருவர் எடுத்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
ஆனால், உண்மைத் தன்மையை அறியாமல் ‘வீடியோவின் ஒரு பகுதியை மட்டும் வெட்டி, பரப்பி, கேரள அரசு மீது திட்டமிட்டு சிலர் அவதூறு பொழிந்து வருகின்றனர்.