திருவனந்தபுரம், ஜுன் 10- அமேசான் காடுகளில் இருந்து நாற்பது நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சிறுவர்கள் குறித்து கேரள பொதுப்பணித் துறை அமைச்சர் முஹம்மது ரியாஸ், உல கிற்கு மகிழ்ச்சியைத் தந்த நாள் என்று வர்ணித்தார். சனிக்கிழமை காலை கிடைத்த ஒரு நேர்மறையான செய்தி ஒவ்வொரு மனிதனுக்கும் ஆறுதல் அளித்துள்ளது. இது ஒரு அற்புதமான நாள் என்று அமைச்சர் முகநூலில் எழுதியுள்ளார். மே 1-ஆம் தேதி அமேசான் காடுகளில் விமா னம் விழுந்து நொறுங்கியதில் சிறுவர்கள் காணாமல் போயி னர். சில நாட்களுக்குப் பிறகு இடிபாடுகளுக்கு இடையே சிறுவர்களின் தாய் உட்பட மூன்று பேரின் சடலங்கள் கண்டெ டுக்கப்பட்டன. ஆனால் சிறுவர்களைக் கண்டுபிடிக்க முடிய வில்லை. குழந்தைகள் உயிருடன் இருப்பதற்கான பல தடயங்கள் மீட்புப் பணியாளர்களுக்கு கிடைத்தன. இதை யடுத்து, 100-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள், தேடுதல் பணி யில் ஈடுபட்டனர். இறுதியாக சனியன்று (ஜுன் 10) 11 மாதங்களே ஆன பிஞ்சுக்குழந்தையுடன் 4,9,13 வயது சிறு வர்கள் கொடிய வன விலங்குகள் வாழும் காட்டில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டனர்.