வெளிநாட்டினர் உள்பட கேரளத்துக்கு வெளியில் இருந்து வருபவர்களுக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்க சிறப்பு ஆரோக்கிய மையங்கள் தொடங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். அதற்கு தேவையான உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
திருவனந்தபுரம் அரசு ஆயுர் வேத கல்லூரி பூஜாப்புரா பஞ்ச கர்மா மருத்துவமனை வளாகத்தில் யோகா பயிற்சி மையத்தை திறந்து வைத்து அமைச்சர் பேசினார். அப் போது அவர் மேலும் கூறியதாவது: சுகாதார பராமரிப்பு, நோய் தடுப்பு மற்றும் நோய் ஒழிப்பு ஆகியவை இந்த சகாப்தத்தில் சுகாதாரத் துறை யின் மிக முக்கியமான அம்சங்களா கும். புதிய கேரளம் செயல்திட்ட மான ஆர்த்ரம் II - இன் ஒரு பகுதி யாக உள்ள 10 முக்கிய திட்டங்க ளில், வாழ்க்கை முறை நோய் தடுப்பு, புற்றுநோயாளிகள் பராம ரிப்பு திட்டம் மற்றும் ஆரோக்கிய மான வாழ்க்கை பிரச்சாரம் ஆகி யவற்றுக்கு முக்கியத்துவம் கொடு த்து செயல் திட்டங்கள் வகுக்கப் பட்டுள்ளன. இதில் ஆயுஷ் துறைக்கு பெரும்பங்கு உண்டு.
உடல் மற்றும் மனதின் ஆரோக் கியத்தை உறுதி செய்வதில் யோகா வுக்கு பெரும் இடம் உண்டு. இதை அங்கீகரித்து, கடந்த இரண்டு ஆண் டுகளில், 1000 யோகா கிளப்புகள், வாழ்க்கை முறை நோய் தடுப்புக்கு முக்கியத்துவம் அளித்து, மாநி லத்தில் தொடங்கப்பட்டுள்ளன. சமூகத்தின் பொதுப்புத்தியை இதற்கு கொண்டு வர முடிந்தது. பூஜப்புரா பஞ்சகர்மா மருத்துவ மனையில், ஒரு கோடி ரூபாய் மதிப்பில் யோகா பயிற்சி மையம் மற்றும் ஓய்வு இல்லம் ஏற்படுத்தப் பட்டது. ஒரே நேரத்தில் 25 பேருக்கு யோகா பயிற்சி அளிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நோயாளி கள் மற்றும் பொதுமக்கள் கூடி யோகா பயிற்சி மேற்கொள்ளவும் போதிய கழிப்பறை வசதியும் செய் யப்பட்டுள்ளது.
நிதி ஆயோக் பாராட்டு
ஆயுர்வேத துறைக்கு முக்கி யத்துவம் அளித்து அரசு முன்னேறி வருகிறது. ஆயுர்வேத துறையை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நிதி யாண்டில் மொத்தம் 116 பணி யிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆயுர்வேத ஆராய்ச்சியை துரி தப்படுத்தும் வகையில் கண்ணூ ரில் உள்ள சர்வதேச ஆயுர்வேத ஆராய்ச்சி மையத்தின் கட்டுமா னப் பணிகள் நடைபெற்று வரு கின்றன. அனைத்து ஊராட்சிகளி லும் ஆயுஷ் மருந்தகங்கள் அமைக்க வேண்டும் என்ற அரசின் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 510 ஆயுஷ் மருந்தகங்கள் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மொத்த சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங் களின் எண்ணிக்கை 600 ஆகும். ஆயுஷ் துறையில் கேரளாவின் முன்னேற்றத்தை நிதி ஆயோக் பாராட்டியது. அந்த அறிக்கையில், நாட்டிலேயே அதிகபட்சமாக மக் கள் ஆயுஷ் சிகிச்சைக்கு வரும் மாநி லம் கேரளா என்று குறிப்பிடப்பட்டி ருந்தது. இது ஆயுஷ் துறையில் சுகா தாரப் பணியாளர்களுக்குக் கிடைத்த அங்கீகாரம் என்று அமைச்சர் கூறி னார்.
ஆயுர்வேத மருத்துவக் கல்வித் துறை இயக்குநர் டி.டி.ஸ்ரீகுமார் தலைமை வகித்தார். ஆயுர்வேத கல்லூரி முதல்வர் ஜி.ஜெய், கண் காணிப்பாளர் ஆர்.எஸ்.ஷிஜி, பொதுப்பணித்துறை செயற்பொறி யாளர் வி.எஸ்.அஜித்குமார், சேவை நிறுவன பிரதிநிதிகள் சுனிஷ்மோன் எம்.எஸ்., எம்.ஏ. அஜித்குமார், சரத்சந்திரலால் ஆகி யோர் பேசினர்.