states

கல்வி உதவித்தொகையை மறுக்கும் ஒன்றியம் கேரளம் மாற்று ஏற்பாடு செய்யும்

திருவனந்தபுரம், டிச. 8- தகுதியான பல்வேறு மாணவர்களின் கல்வி உதவித்தொகை யை ஒன்றிய அரசு முடக்கி வருவதாகவும், அதற்கான மாற்று ஏற்பாடுகளை கேரளம் செய்யும் எனவும்  சட்டப்பேரவையில் அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். பட்டியல் சாதியினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கு சலுகைகளை ஒன்றிய அரசு மறுக்கிறது என்று உறுப்பினர் எம். விஜின் கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்தார். 100 சதவிகிதம் ஒன்றிய  அரசின் பங்காக ஒபிசி போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை  மற்றும் 50 சதவிகிதம்  ஒன்றிய-மாநில அரசு நிதியுதவியுடன் ஓபிசி ப்ரீ மெட்ரிக் கல்வி உதவித்தொகையை நடைமுறைப்படுத்துவதற்காக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகள் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இருந்த சலுகைகள் 9 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கு மட்டுமாக சுருக்கியுள்ளது. கருவூ லத்தில் இருந்து மாணவர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலு த்தும் முறையை ஒன்றிய அரசின் தளத்துக்கு மாற்றியுள்ளது.

100 சதவிகிதம் ஒன்றிய அரசின் திட்டமாக இருந்த ஓபிசி போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை 60 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையை மாநில அரசு கண்டுபிடிக்க வேண்டும். படிப்புகளை அடுக்குகளாக்கி கட்டணங்கள் வகைப்படுத்தப் பட்டுள்ளன. முதல் பிரிவில் ரூ.20,000, இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது பிரிவில் முறையே ரூ.13,000, 8000 மற்றும் ரூ.5000 என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. பிரீமெட்ரிக் முற்பகுதியில் உள்ள அனைவருக்கும் மாநில நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடும்ப வருவாய் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளவர்களுக்கு ஒன்றிய அரசு இ-மெட்ரிக் கல்வி உதவித்தொகை யில் இருந்து விலக்கு அளித்துள்ளது. ஒன்றிய நிதி ஒதுக்கீடு மாநிலத்தை விட குறைவாக உள்ளது. மாநில நிதியில் வருவாய் அளவைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் அதிக தொகை வழங்கப்படுகிறது. ஒன்றிய அரசின் புதிய வழிகாட்டுதல்களால் எந்த பிரிவினருக்கு கல்வி உதவித்தொகை மறுக்கப்பட்டாலும், மாநி லம் மாற்று முறையை அறிமுகப்படுத்தும் என்றும் அமைச்சர் கூறினார்.