திருவனந்தபுரம், மார்ச் 19- அரசு சட்டக் கல்லூரியில் நடந்த தாக்குதல் கேஎஸ்யு திட்டமிட்டு நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குடிபோதையில் இருந்த கேஎஸ்யு தொண்டர்கள் மாணவர்களை திட்டி மோ தலை தொடங்கினர். கல்லூரி மாணவர் சங்கம் நடத்திய விழாவின் போது, கேஎஸ்யு மாணவர்கள் மாணவிகளை அவமதித்து கையைப் பிடித்தனர். இதை எஸ்.எப்.ஐ.யி னர் கேள்வி எழுப்பியபோது, அவர்கள் கும்பலாக தாக்குதல் நடத்தினர். தடி மற்றும் கற்களை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் எஸ்எப்ஐ ஊழியர் அனந்தகிருஷ்ணன் பலத்த காயம் அடைந்தார். அபாத், அப்துல்லா, ஆதித் ஆகியோரும் காயமடைந்தனர். காயமடைந்த எஸ்எப்ஐ தொண்டர்கள் முதலில் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பலத்த காயமடைந்த அனந்தகிருஷ்ணன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் எஸ்.எப்.ஐ-யினர் வருவதை அறிந்த கே.எஸ்யு - இளைஞர் காங்கிரஸ் கும்பல் அங்கு திரண்டது. எஸ்எப்ஐ தொண்டர்கள் வந்தவுடன் தாக்குதல் மீண்டும் தொடர்ந்தது. இந்த தாக்கு தலில் எஸ்எப்ஐ சட்டக் கல்லூரி பிரிவு தலைவர் சபித் மற்றும் பாளையம் பகுதி கமிட்டி உறுப்பினர் அஜித் ஆகியோர் காயமடைந்தனர். மருத்துவக் கல்லூரி போலீஸார் தலையிட்டதைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திய வர்கள் பின்வாங்கினர். மாணவி புகார் செய்தார் ஆபாசமாக பேசியதாகவும், அத்துமீறி நடந்துகொண்டதாகவும் கே.எஸ்.யு தொண்டர்கள் மீது சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் புகார் அளித்துள்ளார். எஸ்.ஏ. அருண், ஆஷிக் அஷ்ரப், நிதின் தம்பி ஆகியோர் மீது அந்த மாணவி மியூசியம் போலீசில் புகார் செய்தார். குடிபோதையில் இருந்த மூவரும் துன்புறுத்தியதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.