திருவனந்தபுரம், ஜுலை 27- இந்த ஆண்டும் ஓணம் பண்டி கைக்கு கேரள அரசு 14 பொருட்கள் அடங்கிய இலவச உணவுப் பைகளை (கிட்) வழங்கும் என்று முதல்வர் பின ராயி விஜயன் தெரிவித்தார். கடந்த அரசாங்கத்தின் போது 13 முறை கிட் விநியோகிக்கப்பட்டது. அதற்கு ரூ.5500 கோடி செலவிடப்பட்டதாகவும் முதல்வர் கூறினார். கோவிட் தொற்றுநோய் பரவிய போது இலவச உணவுப் பைகள் விநியோகம் தொடங்கியது. இத்திட்டத் தின் மூலம் மக்கள் அதிக அளவில் பயனடைந்துள்ளனர். கோவிட் பரவல் குறைந்த பிறகு கிட் வழங்கு வது நிறுத்தப்பட்டது. கடந்த ஓணத் தின்போது மீண்டும் கிட் வழங்கப் பட்டது. கேரளா பெரும் நிதி நெருக்கடி யில் இருந்தாலும், இந்த ஆண்டும் வரும் ஓணத்துக்கு ஓணக் கிட் வழங்கப்படும். இம்முறை துணிப்பை கள் உட்பட 14 பொருட்களையும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.425 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் நலனுக்காகவும், ஒட்டு மொத்த வளர்ச்சிக்காகவும் அரசு நட வடிக்கை எடுத்து வருகிறது. சில விச யங்கள் தடைபடுகின்றன. மாநிலத்தின் கடன் வரம்பை குறைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நாட்டின் பொருளாதாரம் கோவிட் பாதிப்பில் இருந்து விடுபடவில்லை. பொருளாதார ஊக்குவிப்புக்காக நாடு அதிகம் தலையிட வேண்டிய நேரம் இது என்றும் கேரள முதல்வர் கூறினார்.