states

img

பாஜக பிரமுகரின் போலி மதுபான ஆலை 15,000 போலி வெளிநாட்டு மதுபாட்டில்கள் 2500 லிட்டர் ஸ்பிரிட் பறிமுதல்

திருச்சூர், டிச.26- திருச்சூர் அருகே கோழிப்பண்ணை என்ற போர்வையில் போலி மதுபான உற்பத்தி ஆலை நடத்தி வந்த பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டார். வெள்ளஞ்சிரா பாஜக முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர்  கேபிஏசி லால். நாடக நடிகருமான இவருடன் மற்றொரு வரும் கைது செய்யப்பட்டார். காவல்துறையினர் நடத்திய இந்த சோதனையில் 15,000 போலி வெளிநாட்டு மதுபாட்டில்கள் மற்றும் 2500 லிட்டர் ஸ்பிரிட் பறிமுதல் செய்யப்பட்டது. காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து கோழிப்பண்ணையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போதே போலி மதுபான உற்பத்தி நிலையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து போலி மதுபானம் கொண்டுவரப்பட்டு, பல்வேறு இடங்களுக்கு விநியோகம் செய்யும் குடோனாகவும் இப்பண்ணை செயல்பட்டு வந்தது. கோழிப்பண்ணை லாலின் பெயரில் உள்ளது.