கண்ணூர்,பிப்.25- ஊடகங்களும், வலதுசாரிகளும் எவ்வளவு முயன்றாலும் மக்களை இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எப்) அரசுக்கு எதிராகத் திருப்ப முடியாது என்பதை உள்ளாட்சி இடைத்தேர்தல் முடிவுகள் நிரூபிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் கூறினார்.
கண்ணூரில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறுயதாவது: கேரளத்தில் அரசுக்கு எதிரான உணர்வு மக்களிடம் இல்லை. ஆனால் ஊடகங்கள் அதை அப்படியே உருவாக்கி மக்களை எல்.டி. எப்-க்கு எதிராக திருப்ப முயல்கின்றன. எல்டிஎப் இந்த முயற்சிகளை உண்மை நிலையை விளக்கி முறியடிக்கிறது.
ஒன்றிய அரசின் பழிவாங்கும் நடவடிக்கையால் மாநிலம் நிதி நெருக்கடியை சந்தித்து வரு வதையும் மக்கள் உணர்ந்துள்ளனர். இதை இடைத்தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்து கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.