திருவனந்தபுரம், ஆக.5- கேரளத்தில் ஆகஸ்ட் 29 அன்று திருவோணம் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. ஒருவார கால கொண்டாட்டத்தை முன்னிட்டு கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து அதிக அளவில் அத்தியாவ சியப் பொருட்களை கொள்முதல் செய்து வழங்க உணவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சப்ளை கோ கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை உணவுத் துறை உறுதி செய்யும். கடலை, மிளகாய், பயறு போன்ற மானிய விலைப் பொருட்களின் கையிருப்பு குறைவாக உள்ளது. பொருட்களின் வரத்து குறைவு மற்றும் அதிக விலை காரணமாக பற்றாக்குறை உள்ளது. எனினும் இவற்றை தேவைக்கு ஏற்ப வழங்குவதாக மொத்த வியாபாரிகள் உறுதியளித்துள்ளனர். மூன்று பொருட்களும் பொதுச் சந்தையை விட குறைந்த விலையில் சப்ளைகோ கடைகளில் கிடைக்கும். ஓணம் பண்டிகையையொட்டி ஓணம் கண்காட்சிகள் மூலம் பல்வேறு பொருட்கள் வழங் கப்படும். ஓண கிட்டுகள் தயாரிக்கும் பணியும் தொ டங்கியுள்ளது. கிட் கடந்த ஆண்டை விட அதிக பொருட்களைக் கொண்டிருக்கும். அனைத்து வகை ரேசன் கார்டுதாரர்களுக்கும் கிட் வழங்குவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஒன்றிய அரசின் தலையீட்டால், நிதி ரீதியாக நஷ்டத்தில் உள்ள மாநிலம், கடந்த முறை போல் கிட் வழங்க வேண்டுமானால், 400 கோடி ரூபாய் கண்டு பிடிக்க வேண்டும். கிட் வழங்குவதற்கு ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு கமிஷன் கொடுக்க வேண்டும். இதற்கும் ஒரு தொகை தேவைப்படுகிறது. ஹார்டிகார்ப் நிறுவனமும் போதுமான காய்கறி களை விநியோகிக்க முயற்சி மேற்கொண்டுள்ளது. ஓணச் சந்தையை குறிவைத்து விவசாயிகள் சங்கங் கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் காய்கறி சாகு படியில் ஈடுபட்டுள்ளனர். மாநிலத்தின் அனைத்து இடங்களிலும் தரமானப் பொருட்கள் நியாயமான விலையில் கிடைக்கும் என கேரள அரசு உறுதி யளித்துள்ளது.