புதுதில்லி, ஜன.29- கேரளா, தெலுங்கானா, ஹரியா னா மற்றும் அசாம் மாநிலங்களில் உயர்கல்வியில் பெண்கள் அதிகளவு சேர்ந்துள்ளனர் என உயர் கல்வி குறித்த அகில இந்திய ஆய்வு (AISHE) 2021-22 அறிக்கை தெரிவிக் கிறது. இமாச்சலப் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர், மேகாலயா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்கள் தொடர்ந்து அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.
நாடு முழுவதும் உயர் கல்வியில் சேர்ந்துள்ள பெண்களின் எண்ணிக் கை 2,06,91,792. அகில இந்திய ஆய்வ றிக்கையின்படி 2021-22 ஆம் ஆண்டில் உயர்கல்வி நிறுவனங்களில் மொத்த சேர்க்கை 4,32,68,181. இதில் பல்க லைக்கழகங்களில் சேர்ந்தவர்கள் 96,38,345. பல்கலைக்கழகங்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய கல்வி நிறுவனங்களில் சேர்ந்த வர்கள் 3,14,59,092. பிற கல்வி நிறுவ னங்களில் சேர்ந்தவர்கள் 21,70,744. பாலின சமத்துவக் குறியீடு பாலின சமத்துவக் குறியீட்டில் (Gender Parity Index) கேரளா 1.52-புள்ளியுடன் அதிக மதிப்பெண்க ளைப் பெற்றுள்ளது.
கடந்த ஐந்தாண் டுகளில் கேரளம் பதிவு செய்த அதிக பட்ச மதிப்பெண் இதுதான். மாணவர்க ளின் சேர்க்கையை விட மாணவிக ளின் சேர்க்கை விகிதம் அதிகம் உள்ள முக்கிய மாநிலங்கள் கேரளம், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், அசாம், உத்தரகண்ட், தெலுங்கானா, தமிழ் நாடு. இதில் கேரளம் முதலிடத்தில் உள்ளது. தற்போது தெலுங்கானா, அசாம் மாநிலங்களில் சற்று பின்ன டைவு ஏற்பட்டுள்ளது, உத்தரப்பிரதேசம் (69.73 லட்சம்), மகாராஷ்டிரா (45.78 லட்சம்), தமிழ்நாடு (33.09 லட்சம்), மத்தியப் பிரதேசம் (28 லட்சம்), மேற்கு வங்கம் (27.22 லட்சம்), இராஜஸ்தான் (26.89 லட்சம்) ஆகிய ஆறு மாநிலங்களில் அதிகபட்சமாக மாணவிகள் சேர்க் கை நடைபெற்றுள்ளது.
இந்த மாநி லங்கள் மொத்த மாணவர் சேர்க்கை யில் 53.32 சதவீதம் என்று அறிக்கை கூறுகிறது, இந்த மாநிலங்களில் 18-23 வயதுக்குட்பட்டவர்களின் மொத்த மக்கள் தொகையில் 51.4 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. உத்தரப்பிரதேசத்தில் அதிகபட்ச மாக 8,375 கல்லூரிகள் உள்ளன. அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா- 4,692, கர்நாடகா-4,430, இராஜஸ்தான்- 3,934, தமிழ்நாடு- 2,829, மத்தியப் பிரதேசம்-2,742, ஆந்திரப் பிரதேசம் 2,602, குஜராத் 2,395, தெலுங்கானா- 2,083. மேற்கு வங்கம்- 1,514. 2014-15 ஆம் ஆண்டிலிருந்து மாண வர்களுடன் ஒப்பிடுகையில், உயர் கல்வியில் மாணவிகளின் சேர்க்கை அதிகரித்துள்ளதை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. 2014-15இல் இருந்து ஒட்டுமொத்தப் படிப்பில் (91 லட்சம்) மாணவிகளின் பங்கு 55 சத வீதம். மாணவர்களை விட மாணவிக ளின் சேர்க்கை அதிகமாக உள்ளது என்றும் அறிக்கை கூறுகிறது.
இளநிலை கலைப்பிரிவில் (பி.ஏ.,) அதிகபட்சமாக 1.13 கோடி மாண வர்கள் சேர்ந்துள்ளனர். இவர்களில் மாணவிகள் 51 சதவீதம். ஆண்கள் 49 சதவீதம். அறிவியல் பிரிவில், 49.18 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர். இதில் 50.8 சதவீதம் பேர் மாணவிகள். மாண வர்கள் 49.2 சதவீதம். வணிகவியல் பிரிவில் 44.08 லட்சம் பேர் சேர்ந்துள்ள னர், இவர்களில் மாணவர்கள் 47.2 சதவீதம். மாணவிகள் 52.8 சதவீதம். பொறியியல் மற்றும் தொழில் நுட்பத்திற்கு, அனைத்து இளநிலை, முதுநிலை, எம்ஃபில் மற்றும் பிஎச்டி நிலைகளிலும் மொத்தம் 41,31,303 பேர் சேர்ந்துள்ளனர். இதில், கணினி பொறியியல், எலெக்ட்ரா னிக்ஸ் இன்ஜினியரிங், சிவில் இன்ஜி னியரிங், எலெக்ட்ரிக்கல் இன்ஜினி யரிங் மற்றும் பலவற்றிற்கு அடுத்த படியாக கணினிப் பொறியியலில் அதிக எண்ணிக்கையில் மாண வர்கள் சேர்ந்துள்ளனர்.