states

img

கேரளத்தில் ஏழு ஆண்டுகளில் 3 லட்சம் பட்டா விநியோகம்

எருமேலி, ஜூன் 2 - கடந்த 7 ஆண்டுகளில் சுமார் 3 லட்சம்  நிலப் பட்டா விநியோகம் செய்யப்பட்டுள்ள தாக முதல்வர் பினராயி விஜயன் தெரி வித்தார். இரண்டாம் முறையாக இடதுஜன நாயக முன்னணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு மட்டும்  சுமார் ஒன்றே முக்கால் லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டன. அரசாங்கத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு 40,000 பட்டாக்களை வழங்குவதே இலக்கு, ஆனால் 67,000க்கு மேல் வழங்கப்பட்டுள்ளது எனவும்  அவர் தெரிவித்தார். ஏஞ்சல்வாலி - பம்பாவாலி பகுதிகளில்  நிலப் பட்டா வழங்கும் விழாவை முதல்வர் தொடங்கி வைத்தார்.  அப்போது பேசிய அவர், “இப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவு நனவாகி உள்ளது. பெரியாறு புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதி என்பதால், அங்குள்ள மக்களை காலி செய்ய வேண்டும் என சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர். இந்த  புரளியானது அதிர்வு தாங்கு மண்டலப்  பிரச்சனை தொடர்பாக தவறாகப் பயன் படுத்தப்பட்டபோது, சில ஊடகங்களும் அதற்கு ஆதரவளித்தன. ஆனால், அதில் எந்தக் கவலையும் தேவையில்லை என்று தெளிவுபடுத்தப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் இந்த பகுதி புலிகள் காப்பகத்திலிருந்து விலக்கப்பட்டது.

இந்த பிரச்சாரம் மக்கள் மத்தியில் பீதியை பரப்புவதையும் இடதுசாரி அரசாங்கத்திற்கு எதிராகவும் இருந்தது. அப்படிப்பட்டவர்களின் ஆராய்ச்சியின் பொருள் அவர்கள் எங்கு ஊடுருவ முடி யும் என்பதுதான். மக்களை ஒரு போதும் அரசாங்கம் மறக்காது. கடந்த ஏழு வருடங்களில் கேரளாவின் அனுபவம்  அதுதான். பட்டா  விநியோகம் அத்தகைய நடவடிக்கைகளின் தொடர்ச்சி. பட்டா வழங்குவது, அரசுக்கு எதிராகவும், அரசின் ஆதரவாளர்களுக்கு எதிராகவும் போராட்டம் நடத்துபவர்களின் முகத்தில் அறைந்த அடியாகும். 1950-களில் இங்கு வாழத் தொடங்கி யவர்களின் வாரிசுகள்தான் இன்று பட்டா  பெறுகிறார்கள். இக்காலத்தில் இங்கு நிலப்பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சி கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் பல்வேறு காரணங்களால் அது நடைபெற வில்லை. ஆனால், மாநில அரசு இந்தப்  பிரச்சனையை முக்கிய நிகழ்ச்சி  நிரலாக எடுத்துக்கொண்டுள்ளது. வரு வாய் ஆவணங்களை சரி செய்து, சட்டப்படி செல்லுபடியாகும் பட்டா எந்த நிபந்தனையும் இன்றி வருவாய் ஆவ ணங்களை சரி செய்து வழங்கப்பட்டுள் ளது என்று முதல்வர் கூறினார்.