states

img

கேரளாவில் சிபிஐ(எம்) அணிவகுப்பு : தீக்கதிர் சிறப்பிதழ்

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பினராயி விஜயன் தலைமையிலான இடதுஜனநாயக முன்னணி அரசின் சாதனைகளை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தும், ஒன்றிய பாஜக அரசின் மக்கள்விரோதக் கொள்கைகளை அம்பலப்படுத்தியும் கட்சியின் மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தன் தலைமையில் மாபெரும் மக்கள் பாதுகாப்பு அணிவகுப்பை நடத்தி வருகிறது. இந்த அணிவகுப்பு மார்ச் 9 வியாழனன்று இடுக்கி மாவட்டத்தை அடைந்தது. வண்டிப்பெரியாரில் நடைபெற்ற மாபெரும் அணிவகுப்பு சங்கம நிகழ்வையொட்டி தீக்கதிர் சிறப்பிதழ் வெளியிடப்பட்டிருந்தது. சிறப்பிதழை விழா மேடையில் கட்சியின் மாநிலச் செயலாளர்  எம்.வி.கோவிந்தன் வெளியிட மூத்த தலைவரும் மாநில செயற்குழு உறுப்பினருமான எம்.எம்.மணி பெற்றுக் கொண்டார். நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கே.ஜெயச்சந்திரன், இடுக்கி மாவட்டச் செயலாளர் சி.வி.வர்கீஸ், இடுக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.திலகன், தீக்கதிர் சார்பில் தமிழ்நாட்டின் கம்பம் ஏரியா கமிட்டி செயலாளர் இரா.லெனின், தேனி மாவட்ட செய்தியாளர் எஸ்.முத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.