திருவனந்தபுரம், மார்ச் 10- வகுப்புவாத சக்திகள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று சமூக செயற்பாட்டாளர் ஷப்னம் ஹாஷ்மி கூறினார். ‘அப்படி நடந்தால், மனுஸ்மிருதியின் அடிப்படையில் அவர்கள் உருவாக்கிய அரசியல் சட்டமும் அமலுக்கு வரும். பெண்களுக்கும், தலித்துகளுக்கும், ஆதிவாசிகளுக்கும் இடமில்லாத அரசமைப்பாக அது இருக்கும்’ என்று ஷப்னம் கூறினார்.
திருவனந்தபுரம், மார்ச் 10- வகுப்புவாத சக்திகள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று சமூக செயற்பாட்டாளர் ஷப்னம் ஹாஷ்மி கூறினார். ‘அப்படி நடந்தால், மனுஸ்மிருதியின் அடிப்படையில் அவர்கள் உருவாக்கிய அரசியல் சட்டமும் அமலுக்கு வரும். பெண்களுக்கும், தலித்துகளுக்கும், ஆதிவாசிகளுக்கும் இடமில்லாத அரசமைப்பாக அது இருக்கும்’ என்று ஷப்னம் கூறினார்.
ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராகப் போராடிய கிட்டூர் ராணி சென்னம்மா வின் 200ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் ‘நானும் ராணி சென்னம்மாதான்’ என்ற பிரச்சாரத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. திருவனந்தபுரம் கேசரி ஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேவகி வாரியர் நினைவு மையச் செய லர் டி.ராதாமணி, திரைப்பட இயக்கு நர் விது வின்சென்ட், தலித் சமூக ஆர் வலர் வினிதா விஜயன் உள்ளிட்டோர் பேசினர்.