states

img

காலநிலை மாற்றங்களும் சுற்றுலா துறைக்கு பயன்படுத்தப்படும்

திருவனந்தபுரம், டிச.22- காலநிலை மாற்றங் களும் சுற்றுலாத் துறைக்கு பயன்படுத்தப்படும் என வும் காலத்திற்கேற்ற வாய்ப்புகளை பயன்படுத்தி சுற்றுலாத்துறையில் மேலும் பல சாதனைகளை எட்டு வதே நோக்கம் எனவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். திருவனந்தபுரம் மாநக ராட்சியுடன் இணைந்து கேரள சுற்றுலாத் துறை, திரு வனந்தபுரம் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கவுன்சில் மற்றும் கேரள ரோஸ் சொசைட்டி ஆகி யவை இணைந்து நடத்திய நகர வசந்தம் புஷ்போத்ஸ வம் மற்றும் ரேகாட்டா நாட்டிய சங்கீத் கேந்திரா வின் ஆண்டு விழாவையும் அவர் தொடங்கி வைத்து மேலும் பேசுகையில், பகல் வேலை முடிந்து இரவில் கேளிக்கைக்கு ஏற்பாடு செய்வது கேரளாவின் பாரம் பரியத்தின் ஒரு பகுதி யாகும். இத்தகைய நடை முறைகளை மீண்டும் கொண்டு வர சுற்றுலாத் துறையில் இரவு வாழ்க்கை ஊக்குவிக்கப்படுகிறது. கேரளாவின் அமைதி யான சூழல் சுற்றுலாத் துறைக்கு சிறப்பம்சமாக உள்ளது.

டைம்ஸ் இதழ் மற்றும்  இந்தியா டுடே போன்ற தேசிய மற்றும் சர்வதேச வெளியீடுகளால் உலகில் கட்டாயம் பார்க்க வேண்டிய 50 சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக கேரளா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கேரளா சுற்றுலாத்துறைக்கு முக்கிய  அங்கீகாரமாக இருக்கும் என்றார். மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கு  ரோஜா மலர்களையும், ரேகாட்டா நாட்டிய சங்கீத  மைய இயக்குநர் கிரிஜா  சந்திரனுக்கு சலங்கையை யும் வழங்கி ஆண்டு நிகழ்ச்சிகளை முதல்வர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் பி.ஏ.முஹம்மது ரியாஸ் தலைமை வகித் தார். நகர்ப்புற வசந்தத்தின் ஒரு பகுதியாக சுற்று லாத் துறையினால்  தயாரிக்க ப்பட்ட  ஒளியலங்காரங் களையும் அமைச்சர் திறந்து வைத்தார். அமைச்சர்கள் ஜி.ஆர்.அனில், அந்தோணி ராஜு, ரோஷி அகஸ்டின், வி.கே.பிரசாந்த் எம்.எல்.ஏ.,  சுற்றுலாத்துறை இயக்குனர் பிரேம் கிருஷ்ணன் உள்ளி ட்டோர் கலந்துகொண்டனர். ரேகாட்டா நாட்டிய சங்கீத கேந்திரா மாணவர்களின் நடன நிகழ்ச்சி நடத்தினர்.

திருவனந்தபுரத்தில் இனி இரவும் பகலும் வசந்தம்

வியாழக்கிழமை மாலை  3 மணி முதல் கனகக்குன்றில் உள்ள கண்காட்சி நகருக்குள் பொதுமக்கள் செல்லலாம். கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.100, 12 வயதுக்குட்பட்ட குழந்தை களுக்கு ரூ.50. நகரில் ஐந்து மையங்களில் டிக்கெட் கவுன்டர்கள் உள்ளன. கனகக்குன்று முன்புறம், அருங்காட்சியகம் எதிரே சுற்றுலா அலுவலகம், ஜவஹர் பாலபவன் எதிரே புஷ்போத்சவம் ஏற்பாட்டுக் குழு அலுவலகம், வெள்ள யம்பலத்தில் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கவுன்சில் அலுவலகம், வசுத்தக்காடு தாகூர் தியேட் டர் ஆகிய இடங்களில் கவுன்டர்கள் அமைக்கப் பட்டுள்ளன. இரவு ஒரு மணி வரை  நிகழ்ச்சி நடக்கிறது. நள்ளி ரவு 12 மணி வரை டிக்கெட் கிடைக்கும். ரேகாட்டா நாட்டியசங்கீத கேந்திரா தலைமையிலான நடன நிகழ்ச்சிகளும் நகர்ப்புற வசந்தத்தை சேர்க்கும். பத்மப்ரியா, ரச்சனா நாராயணன்குட்டி, நீனா பிரசாத், ராஜ்ஸ்ரீ வாரியர், கோபிகா வர்மா, பிரியங்கா வேம்பாட்டி மற்றும் பலர் நடன நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர். காயத்ரி, ராஜலட்சுமி, புஷ்பாவதி, அகிலா ஆனந்த், அபர்ணா ராஜீவ், நாராயணி கோபன், காலித் மற்றும் பலரின் இசை நிகழ்ச்சிகளும், கனல்  மியூசிக்கல் பேண்ட் மற்றும் ஜனமைத்ரி காவல்துறை யின் கலாச்சாரப் பிரிவின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறுகின்றன. பொது வீதிகள் மற்றும் சூர்யகாந்தி வளாகத்தில் தனி வாத்திய இசை நிகழ்ச்சி களும் நடைபெறும். கஃபே  குடும்பஸ்ரீயின் தலைமையில் சுமார் 20 மாநிலங்களில் இருந்து வரும் உணவு வகைகளைக் கொண்ட உணவகங்களையும் சூர்ய காந்தி அமைத்துள்ளது.