திருவனந்தபுரம், ஜுன் 6 - இந்தியாவிலேயே ‘இணையம் மக்களின் உரிமை’ என்று அறிவித்த ஒரே மாநிலம் கேரளா என்றும், ‘அனைவருக்கும் இணையம்’ என்ற கனவை கேரளாவில் கே ஃபோன் நன வாக்கும் எனவும் முதல்வர் பினராயி விஜயன் கூறினார். வெறும் அறிவிப்புகளில் மட்டும் நின்றுவிடாமல், கே ஃபோன் திட்டத்தை அரசு செயல்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். கேரளாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க திட்டமான ‘கே ஃபோன்’ செயல்பாட்டை ஜூன் 5 திங்களன்று, திருவனந்தபுரத்தில் நடை பெற்ற விழாவில் முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். அப்போது உரையாற்றிய முதல்வர் மேலும்9 கூறுகையில், கே ஃபோன் மூலம் அனைவருக்கும் இணைய வசதி கிடைக்க அடிப்படை வசதிகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் இணை யத்திற்கான உரிமையை அனைவரும் அணுகு வதை இடது ஜனநாயக முன்னணி அரசு உறுதி செய்கிறது. வாக்குறுதிகளை நிறைவேற்று வதற்கும், அறிவிப்புகளை நிறைவேற்று வதற்கும், பொறுப்பான நிர்வாகம் என்பதற்கும் கே ஃபோன் திட்டம் மற்றொரு உதாரணமாக திகழ்கிறது என்றார்.
பினராயி விஜயன் முழு உரை: 4