திருவனந்தபுரம், ஜுலை 13- கேரளத்துக்கு அதிக முதலீடு வரும் என்றும், இங்குள்ள சூழ்நிலை அதற்கு சாதகமாக இருப்பதாகவும் முதல்வர் பினராயிவிஜயன் கூறினார். சில பெரிய தொழிற் சாலைகள் கேரளாவுக்கு வரத் தயாராக உள்ளன. பன்னாட்டு நிறுவனங் கள் வர விருப்பம் தெரிவித்துள்ளன. சிலர் வந்திருக்கிறார்கள். அதை மேலும் வலுப் படுத்த வேண்டும். மாநிலத்தில் சில ஆரோக்கியமற்ற போக்குகளை முற்றிலுமாக தவிர்த்து ஆரோக்கியமான சூழலை கொண்டு வர முடியும் என்றார். தொழில் துறையால் தொடங்கப்பட்ட ‘ஓராண்டு ஒரு லட்சம் தொழில் முயற்சி’ திட்டத்தின் ஒரு பகுதியாக சட்டமன்ற உறுப் பினர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட பயிலரங்கை முதல்வர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் மேலும் கூறியதாவது:
ஒரு தொழில் வந்தால் நாட்டுக்கு வேண்டாதவர்கள் வந்திருக்கிறார்கள் என்ற எண்ணம் ஒரு காலத்தில் இருந்தது. இந்த எண்ணம் நிறைய மாறிவிட்டது. இப்போது அப்படிப்பட்ட மனோபாவம் இல்லை. அதிகாரிகள் மட்டத்தில் தாமதம் ஆவதாக எழுந்த புகாருக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. தொழில் தொடங்கு வதற்கு தேவையான பொதுவான நிபந்தனைகள் உருவாக்கப்பட்டுள்ளன. தொழில் வளர்ச்சிக்கு பெரும் தனியார் முதலீடு தேவைப்படுகிறது. ஆனால், தனி யார் முதலீடு எதையும் ஊக்குவிக்கும் நிலை இல்லை. கேரளாவுக்கு ஏற்ற, சுற்றுச்சூழ லுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத தொழில்களை மட்டுமே ஏற்க முடியும். பொதுத்துறை நிறுவனங் கள் பாதுகாக்கப்படவேண்டும் என்பது இந்த அரசின் அடிப்படை நிலைப்பாடு. பொதுத்துறை நிறுவனமே தேவை யில்லை, அவற்றை விற்று மொத்தப் பணத்தையும் அரசின் பிற தேவை களுக்குப் பயன்படுத்துவதே நல்லது என்ற பொதுவான மனநிலை நாட்டில் உள்ளது. அங்குதான் பொதுப்பணித் துறையைப் பாதுகாக்கும் மாற்றை முன்னெடுத்துச் செல்கிறோம். பெரிய தொழில்கள் மட்டும் போதாது, சிறு தொழில்களும் பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளன. இதை உணர்ந்துதான் ஆண்டுக்கு ஒரு லட்சம் தொழில் நிறுவனங்கள் என்ற முழக்கத்து டன் தொழில் துறை செயல்பட்டு வரு கிறது என்றார் முதல்வர்.
கடந்த அரசாங்கத்தின் போது 69,138 தொழில் நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட் டன. அதன்மூலம் ரூ.6,448 கோடி முத லீடும் 2,45,369 வேலைவாய்ப்புகளும் கிடைத்தன. இந்த அரசு பதவியேற்ற முதல் ஆண்டில் 17,855 நிறுவனங்கள் தொடங்கப் பட்டன. ரூ.1,736 கோடி முதலீட்டில் 64,541 வேலைவாய்ப்புகள் உருவாக்கப் பட்டுள்ளன என்றார். நிகழ்ச்சிக்கு சபாநாயகர் எம்.பி.ராஜேஷ் தலைமை வகித்தார்.