states

img

அறிவியலும் தொழில்நுட்பமும் மனித நலனுக்காகவே! சுகாதாரத்தில் கேரளா முதலிடம்: முதல்வர் பெருமிதம்

திருவனந்தபுரம், ஆக. 4-  மனித நலனுக்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை பயன் படுத்த வேண்டும் என்றும், சுகா தாரத்தில் நாட்டிலேயே கேரளா முத லிடம் வகிக்கிறது என்றும் முதல்வர் பினராயி விஜயன் கூறினார். திருவனந்தபுரம் ஸ்ரீ சித்ரா மருத்துவ மையம் ஏற்பாடு செய்த உயிரி மருத்துவ மொழிபெயர்ப்பு ஆராய்ச்சி தேசிய மாநாட்டில் சர்வதேச அமர்வை யும்  பயிலரங்கையும் கேரள முதல்வர்  தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், பிரெய்ன் கெயின்  திட்டத்தின் ஒரு பகுதியாக உலகில் எங்கிருந்தும் சிறந்த திறமைசாலிகளை வரவழைக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. நோபல் பரிசு பெற்றவர்களை நமது ஆராய்ச்சி மட்டத்தில் தொடர்பு கொண்டு அவர்களை  அழைப்பதற்காக ஸ்காலர் இன் ரெசிடென்ஸ் திட்ட மும் நடந்து வருகிறது. இங்கு மலை யாளி ஆராய்ச்சியாளர்களுக்கு தேவை யான வசதிகள் செய்து தரப்படும். அந்த வகையில், கேரளாவின் குறை பாடுகளும் தீர்க்கப்படும். மருத்துவ தரவு சேகரிப்பும் முக்கிய மானது. மிகப் பெரிய தரவு சேகரிப்பு இப்போது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. சிறந்த ஆராய்ச்சி ஆய்வுகளுக்கு மிகவும் பாது காப்பான முறையில் நிபுணர்களுக்கு தரவுகள் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நிலைபாடாகும். அத்த கைய பொதுவான சூழலில், மாநாடு மற்றும் பயிலரங்கம் இங்குதான் தொடங்குகிறது. இது இளம் ஆராய்ச்சி சமூகத்தை ஊக்குவிக்கும் என்று முதலமைச்சர் கூறினார்.