திருவனந்தபுரம், மார்ச் 15 - குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியல் சாச னத்துக்கு எதிரானது என்றும், மக்கள் விரோத வகுப்புவாத நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதி என்றும் முதல்வர் பினராயி விஜயன் கூறினார். கேரளாவில் இச்சட்டம் அமல்படுத்தப்படாது என்கிற இதே நிலைப் பாடு தொடரும் என்றும், அதற்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் பின ராயி விஜயன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அவர் பேசுகையில், கேரளத்தில் சிஏஏ அமல்படுத்தப்பட மாட்டாது என்ற அறிவிப்பின் ஒரு பகுதியாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. இந்த சட்டம் மக்களை மதத்தின் அடிப்படை யில் பிரிக்கிறது. இது பிரிவினைவாத அரசியலின் மூலம் தேர்தல் ஆதாயத்தைப் பெறுவதற்கான நடவடிக்கையாகும்.
இந்தியா எனும் கருத்துக்கு சவால்
சிஏஏ என்பது இந்தியா என்கிற கருத்துக்கு ஒரு சவால். இது அரசியல் சாசன விழுமியங்களை அப்பட்டமாக மீறுவதாகும். புலம்பெயர்ந்தோர் முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாதவர்கள் என எவ்வாறு பிரிக்கப்படுகிறார்கள்? இச்சட்டத்தின் நோக்கம் முஸ்லிம் குடியேறிகளின் குடியுரிமை யை ரத்து செய்வதாகும். சிஏஏ அமல்படுத்தப்பட மாட்டாது என்ற நிலைப்பாட்டை எடுத்த முதல் மாநி லம் கேரளம். இதன் ஒரு பகுதியாக, போராட்டம் நடத்தப்பட்டு, சிறப்பு சட்டசபை கூட்டம் நடந்தது. ஆர்.எஸ்.எஸ்-இன் நிகழ்ச்சி நிரல் இங்கு செயல்படுத்தப்படாது என மாநில அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது என முதல்வர் கூறினார்.
குடியுரிமை திருத்தச் சட்டம், அரசிய லமைப்புக்கு முரணானது மற்றும் மக்கள் விரோத வகுப்புவாத செயல்திட்டத்தின் ஒரு பகுதி யாகும், கேரளாவில் செயல்படுத்தப்படாது என்று மீண்டும் மீண்டும் அறிவிக்கப்பட்டது. அந்த நிலைப்பாட்டை அனைத்து மட்டங்களிலும் நிலை நிறுத்துவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. மாநில அரசு தாக்கல் செய்த அசல் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தேர்தலுக்கு முன்னதாகவே அவசர அவசரமாக விதிகளை வெளியிட்டு சட்டத்தை அமல்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வரும் சூழலில், சட்டரீதியான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள புதனன்று (மார்ச் 13) அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசியலமைப்புக்கு எதிரானது
இந்த சட்டம் இந்திய அரசமைப்பின் சாரத்திற்கு எதிரானது - மக்களை மத அடிப்படையில் பிரிக்கிறது. இது சங்பரிவாரின் தீவிர இந்துத்துவா நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதி. பிரித்தாளும் அரசியலின் மூலம் தேர்தல் ஆதாயம் அடையும் சங் பரிவார்களின் இந்த கேவலமான செயல் சர்வதேச அளவில் கேள்விக்குறியாகி வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை உட்பட சட்டத்தின் பாரபட்சமான தன்மை குறித்து விமர்சனங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
சிஏஏ என்பது ஒவ்வொரு அர்த்தத்திலும் இந்தியா என்ற கருத்துக்கு ஒரு சவால். 2014 டிசம்பர் 31 அன்று அல்லது அதற்கு முன் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானி ஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்குதல்; முஸ்லிம்களுக்கு மட்டும் குடியுரிமை மறுப்பது இந்த சட்டத்தின் அடிப்படை. இது அர சமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விழுமியங்களை அப்பட்டமாக மீறும் செயலாகும். ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கை குடியுரிமையை நிர்ணயிப்பதற்கான நிபந்தனையாக உள்ளது. இதுதான் புறக்கணிப்பு அரசியல். முஸ்லிம் சிறுபான்மையினர் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள். அரசமைப்புச் சட்டத்திற்குப் பதிலாக மனுஸ்மிருதியை முன்னிறுத்தும் சங்கபரிவார் மூளையில் இருந்துதான் இந்த விஷச் சட்டம் பிறந்தது.
முதன் முதலில் வாஜ்பாய் ஆட்சியில்...
சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என்ற சொல் முதன்முதலில் குடியுரிமைச் சட்டத்தில் 2003 ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் யார் சட்ட விரோதமாக குடியேறியவர் என்பது மதத்தால் வரையறுக்கப்படவில்லை. 2019 ஆம் ஆண்டு திருத்தம் குடியுரிமையை வரையறுப்பதற்கான அடிப்படையாக மதத்தை மாற்றியது. மதத்தின் அடிப்படையில் குடியுரிமை என்ற கருத்து நாட்டின் அரசியலமைப்பில் இல்லை. இந்த சட்டம் இந்திய அரசமைப்பு சட்டத்தின் 14, 21, 25 மற்றும் அரசமைப்பின் அடிப்படைக் கொள்கையான மதச்சார்பின்மையை மீறுவதாகும். அடிப்படை உரிமைகளைப் பாதிக்கும் வகையில் எந்தச் சட்டத்தையும் அரசுகள் இயற்ற முடியாது.
அரசமைப்பின் பிரிவு 14, சட்டத்தின் முன் சமத்துவம் ( EQUALITY BEFORE LAW) மற்றும் இந்தியாவின் எல்லைக்குள் அனைவருக்கும் சட்டங்களின் சமமான பாதுகாப்பை (PROTEC TION OF LAWS) உறுதி செய்கிறது.
மதப்பாகுபாட்டை சட்டப்பூர்வமாக்கும் முயற்சி
புலம்பெயர்ந்தோரை முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாதவர்கள் எனப் பிரிப்பதன் மூலம், இந்தியா எப்போதும் நிலைநிறுத்தி வரும் அர சமைப்பு நெறிமுறைகளுக்கு எதிராக, மத பாகு பாட்டை சட்டப்பூர்வமாக்க முயற்சிக்கிறது. அண்டை நாடுகளில் துன்புறுத்தப்படும் சிறுபான்மை யினரைப் பாதுகாப்பதே குறிக்கோள் என்றால், அந்த நாடுகளில் துன்புறுத்தப்படும் முஸ்லிம் மதச் சிறுபான்மையினரை ஏன் சேர்க்கக்கூடாது? பாகிஸ்தானில் உள்ள அஹ்மதியா முஸ்லிம்கள், ஆப்கானிஸ்தானில் உள்ள ஹசாராக்கள், மியான்மரில் உள்ள ரோஹிங்கியாக்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் அனைவரும் குடியுரி மைக்கு வெளியே இருப்பது குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அரசியல் நோக்கத்தைக் காட்டுகிறது. ரோஹிங்கியா அகதிகளை இந்தியாவிலிருந்து நாடு கடத்தக் கோரி ஒன்றிய அரசு உச்ச நீதி மன்றம் சென்றதையும் நினைவில் கொள்ள வேண்டும். சிஏஏ இன் உண்மையான நோக்கம் புலம்பெயர்ந்த முஸ்லிம்களின் குடியுரிமையை சட்டவிரோதமாக்குவதாகும்.
பௌத்தர்கள், இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் தவிர அனைத்து ஊடுருவல்காரர்களும் நாட்டி லிருந்து அகற்றப்படுவார்கள் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் பலமுறை கூறினார். கடந்த மக்களவைத் தேர்தலின் போது, வங்காளம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் என்.ஆர்.சி. விரிவு படுத்தப்படும் என அறிவித்தார். 2019 நவம்பர் 21 மற்றும் 2019 டிசம்பர் 21 ஆகிய தேதிகளில் அமித் ஷா இதை நாடாளுமன்றத்தில் மீண்டும் கூறி னார். அப்போது, என்ஆர்சி நாடு முழுவதும் பரவும் என்றும், ஊடுருவும் நபர்கள் தப்பிக்க முடியாது என்றும் கூறப்பட்டது.
என்.ஆர்.சி., என்.பி.ஆர். சட்டங்களும் அமல்படுத்தப்படாது
2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அரசமைப்புக்கு முரணான குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றியபோது, அதற்கு எதிராக ஒட்டுமொத்த கேரளாவும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியது. மதச்சார்பின்மை யிலிருந்து விலகுவது என்பது அரசமைப்பின் அடித்தளத்தை தகர்ப்பதற்குச் சமம் என்பதை எல்.டி.எப் அரசு அப்போது தெளிவுபடுத்தியது.
ஆரம்பத்தில் இருந்தே, குடியுரிமை திருத்தச் சட்டம் மனிதாபிமானத்திற்கு எதிரானது, அர சமைப்பிற்கு எதிரானது என்று அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தி வருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) மற்றும் மக்கள் தொகைப் பதிவேடு (என்பிஆர்) ஆகியவை கேரளாவில் நடைமுறைப்படுத்தப்படாது என்று சந்தேகத்திற்கு இடமின்றி அறிவிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்த முதல் மாநிலம் கேரளம்.
அப்போது, அனைவரையும் ஒன்றிணைத்து போராட்டம் நடத்த அரசு நடவடிக்கை எடுத்தது. பாளையம் தியாகிகள் மண்டபத்தில் அரசு தலை மையில் நடைபெற்ற மாபெரும் கண்டனப் பேரணி யும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டமும் இந்தப் பிரச்னையில் ஒற்றுமை யை ஏற்படுத்தியது.
முதன் முறையாக கேரளம்...
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி தீர்மானம் நிறைவேற்ற சிறப்பு சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்றது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி நாட்டிலேயே முதன்முறையாக கேரள சட்டசபையில் 2019 டிசம்பரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கேரள முதல்வர் என்ற முறையில், பாஜக அல்லாத 13 முதல்வர்களுக்கு இந்த விவகாரத்தில் முன்முயற்சி எடுக்கக் கோரி கடிதம் எழுதப்பட்டது. பரந்த ஒருமித்த கருத்துக்கு வழி வகுக்கும் வகையில் இது செய்யப்பட்டது.
அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கக் கூட்டங்களைக் கூட்டி, ஆர்.எஸ்.எஸ்.ன் நிகழ்ச்சி நிரலை இங்கு செயல்படுத்த முடியாது என்று உரக்க அறிவித்தது. இதைத் தொடர்ந்து குடியுரிமைச் சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு மனு தாக்கல் செய்தது. இந்தப் பிரச்சனைக்காக உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்த முதல் மாநில மும் கேரளம்தான். அரசு இவ்வளவு வலுவான நிலைப்பாட்டை எடுத்தது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மஞ்சேஸ்வரம் முதல் பாற சாலை வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் எல்.டி.எப் தலைமையில் மனிதச் சங்கிலி அமைக்கப்பட்டது. குடியுரிமைப் பிரச்சனையில் தவிக்கும் மக்களின் அச்சத்தை மாற்றி, அவர்களு டன் இருப்பதாக தைரியத்தை ஊட்டியுள்ளது மாநில அரசு. ஆரம்பத்தில் அரசின் நடவடிக்கைகளை ஒப்புக்கொள்ளத் தயாராக இருந்த காங்கிரஸ், திடீரென தனது நடவடிக்கையை மாற்றியது. பின்னர், ஒருங்கிணைந்த போராட்டம் இல்லை என்ற நிலை காங்கிரஸிடம் இருந்து வந்தது. காங்கிரஸின் இந்த முடிவு, வகுப்புவாதப் பிரி வினைச் சட்டத்திற்கு எதிரான ஒன்றுபட்ட போராட்டங்களை வலுவாக ஆதரித்த கேரள மக்களுக்கு சவாலாக அமைந்தது. குடியுரிமைப் பிரச்சனையில் இடதுசாரிகளுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காங்கிரஸ் கட்சி அளவிலான நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு சென்றது.
போராட்டத்தில் சிபிஎம் தலைவர்கள் - எம்.பி.க்கள்
2019 டிசம்பர் இரண்டாவது வாரத்தில், பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியபோது, நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. டிசம்பர் 10 அன்று, மதச்சார்பற்ற அரசியலை கடைப்பிடிப்ப வர்கள் நாடு முழுவதும் தெருக்களில் இறங்கினர், அதே நேரத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கட்சித் தலைவர் வீட்டில் விருந்து வைத்தனர். மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்ட சீத்தாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத், பிருந்தா காரத் போன்ற சிபிஎம் தலைவர்கள் தில்லியில் கைது செய்யப்பட்டனர். கேரளத்தைச் சேர்ந்த இடதுசாரி எம்.பி.க்கள் மக்கள் போராட்டத்துக்கு ஆதரவாக நின்றனர்.
2019 டிசம்பர் 9 அன்று மக்களவையில் குடியுரிமை திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட போது, கேரளத்தைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் மட்டுமே அதற்கு எதிராக வலுவான குரலை எழுப்பினார். அவர் ஆலப்புழா நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.ஆரிப்.
மக்களவையைப் போலவே, மாநிலங்கள் அவையிலும் இடதுசாரி உறுப்பினர்கள் எளமரம் கரீம், பினாய் விஸ்வம், கே.கே.ராகேஷ் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு திருத்தத்தை முன்மொழிந்தனர். இடதுசாரி எம்.பி.க்கள் தான் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தக் கோரினர். மசோதாவை தேர்வுக் குழுவுக்கு விடுவதற்கான தீர்மானத்தையும் முன்வைத்தனர்.
பாதுகாப்புக் கவசமாக...
2020 ஜனவரியில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் தேசிய தலைநகரான தில்லியில் வெடித்தபோது கேரளத்தின் காங்கிரஸ் எம்.பி.க்களை எங்கும் பார்க்க முடியவில்லை. சங்பரிவாரால் திட்டமிட்டு முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் நடந்தது. சிறுபான்மையினர் தாக்கப்பட்டபோது, இடதுசாரிப் பிரதிநிதிகள்தான் அவர்களைக் காப்பாற்ற வந்தனர். ஒன்றிய அரசின் துணையுடன் அங்கு திட்டமிட்ட சிறுபான்மை வேட்டை நடந்தது. கலவரம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட இடதுசாரி எம்.பி.க்கள், கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக போராடிய மாணவர்களை காவல்துறையினர் தாக்கினர். இதை எதிர்த்து சாகீன்பாக்கில் நடந்த போராட்டத்தில் காவல் துறையினருடன் சமூக விரோதிகள் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். இடதுசாரி எம்.பி.க்களும் தலைவர்களும்தான் பாதுகாப்புக் கவசமாக நின்றனர். ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர், ‘கோலி மார்ரோ சாலோம் கோ’ என்று வெறுப்பை கக்கினார். கலவரத்தை தூண்டிய அவரது பேச்சுக்கு எதிராக பிருந்தா காரத்தும் சிபிஎம் மாநில செயலாளரும் நீதிமன்றம் சென்றனர்.