கேரளாவில் கட்டுமான கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
கேரள மாவட்டத்தில் உள்ள கைதபோயிலில் கட்டுப்பட்டு கொண்டிருந்த கட்டிடம் ஒன்று இன்று(செவ்வாய்கிழமை) காலை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர். மர்கஸ் அறிவு நகரில் பல மாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அந்த கட்டிடத்தின் முதல் தளத்தை கான்கிரீட் போடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது கட்டிடம் இடிந்ததில் 20 தொழிலாளர்கள் காயமடைந்தனர். இதில் பலத்த காயமடைந்த 3 தொழிலாளர்கள் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
அதனை தொடர்ந்து இடுபாடிகளில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் மீட்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.