திருவனந்தபுரம், ஜுலை 3- கேரளாவில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி கைதான பாஜகவின் கூட்டாளியான ஜனபக்சம் கட்சி தலைவர் பிசி ஜார்ஜிடம் கேள்வி எழுப்பியதற்காக பெண் பத்திரிகையாளரை அவமதித்ததுடன் தாக்கவும் முற்பட்டார். காவல் துறையினர் தலை யிட்டு தடுத்தனர். கேரளத்தில் முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டிக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டிய சூரிய மின்தகடு தொழில் செய்துவந்த பெண்மணியின் நண்பர் பி.சி.ஜார்ஜ். அந்த பெண்மணியை ‘சர்க்கரையே’ என்று அழைப்பதாக அண்மையில் ஒரு பேட்டியிலும் பி.சி.ஜார்ஜ் தெரி வித்திருந்தார். இந்நிலையில் தன்னை விருந்தினர் மாளிகைக்கு வரவழைத்து பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதாக அந்த பெண்மணி புகார் அளித்திருந் தார். இதன்பேரில் சனியன்று (ஜுலை 2) பி.சி.ஜார்ஜ் கைது செய்யப்பட்டார். காவல்துறையினர் புடைசூழ தைக்காடு விருந்தினர் மாளிகையில் இருந்து வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். பாலியில் புகார் அளித்த பெண்மணியின் பெயரைக் குறிப்பிடுவது குற்றச்செயல் என்பதை கைரளி டிவியின் நிருபர் ஷீஜா சுட்டிக்காட்டினார். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை சொல்வது சரியா என்று கேள்வி எழுப்பியதும், அப்படியென்றால் உன் பெயரை சொல்லவா என்று அவமதித்தார். இது சரியல்ல என்றும், தவறான செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பத்திரிகையாளர்கள் கோரினர். இதனால் ஆத்திர மடைந்த ஜார்ஜ், அவதூறாக பேசினார். இதையடுத்து ஜார்ஜுடன் இருந்தவர்கள் அந்த பெண் பத்திரிக்கை யாளரை தாக்க முயன்றனர். காவல்துறையினர் தடுத்தனர்.
நடவடிக்கை வேண்டும்: கே.கே.ஷைலஜா
கைரளி தொலைக்காட்சி நிருபர் ஷீஜாவுக்கு எதிராக பி.சி.ஜார்ஜ் கருத்து தெரிவித்திருப்பது வன்மை யாக கண்டிக்கத்தக்கது என்றும், கேரளாவின் பொது சமூக, கலாச்சாரத்துக்குப் பொருந்தாத வகையில் எதிர் வினையாற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் கே.கே.ஷைலஜா கூறியுள்ளார். பிசி ஜார்ஜின் பதில், தொழில் சுதந்திரத்தின் மீதும் பெண்மை மீதுமான தாக்குதல். இத்தகைய நட வடிக்கைகளுக்கு எதிராக ஜனநாயகவாதிகள் கடுமை யாக வினையாற்ற வேண்டும். ஷீஜா, ஊடகத் துறையில் பணிபுரியும் மிகவும் கண்ணியமான மற்றும் தைரியமான நபர். இதுபோன்ற புகார்களை பரிசீலித்து முன்னேற ஷீஜாவுக்கு அனைத்து ஆதரவையும் தருவ தாக கே.கே ஷைலஜா தனது முகநூலில் எழுதியுள்ளார்.