states

img

பூஞ்சேரி மட்டம் மக்கள் வாழத் தகுதியில்லாத பகுதியாக அறிவிப்பு?

வயநாடு கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சூரல் மலை, மேப்பாடி, முண்டக் கை, பூஞ்சேரி மட்டம் ஆகிய கிராமங் கள் உருக்குலைந்துள்ளன. நிலச் சரிவு ஏற்பட்ட மலைக்கு மேலே உள்ள கிராமமான பூஞ்சேரி மட்டம் மக்கள் வாழத் தகுதியில்லாத பகுதியாக அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பூஞ்சேரி மட்டம்  கிராமப் பகுதியில் இருந்து தான் முதலில் நிலச்சரிவு தொ டங்கியது. பூஞ்சேரி மட்டப் பகுதியின் மண் சரிவு காரணமாகவே சூரல் மலை, மேப்பாடி, முண்டக்கை உள் ளிட்ட மலை அடிவாரப் பகுதிகளில் கடு மையான நிலச்சரிவு ஏற்பட்டது.

நிலச்சரிவில் சூரல்மலை, மேப் பாடி, முண்டக்கை பகுதிகளின் 60% மட்டுமே அழிந்துள்ள நிலையில், பூஞ்சேரி மட்ட கிராமம் 100% அளவில் முற்றிலுமாக அழிந்துள்ளது. அந்த கிராமத்தில் இருந்த வீடுகள் அனைத் தும் தரைமட்டமாகியுள்ள நிலையில், பூஞ்சேரி மட்டம் கிராம மக்கள் அனை வரும் நிலச்சரிவில் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், “பூஞ்சேரி மட்டத் தில் மக்கள் மீண்டும் குடியமர்த்தப் பட வாய்ப்பில்லை” என வயநாடு மாவட்ட அதிகாரிகள் தகவல் தெரி வித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரி கள் மேலும் கூறுகையில்,”நிலச் சரிவின் ஆரம்பப் பகுதியான பூஞ்சேரி மட்டம் கிராமம் முற்றிலும் அழிந்து போனது. நூற்றுக்கணக்கான வீடு கள் இருந்த பூஞ்சேரி மட்டத்தில் பேரி டருக்குப் பின் ஒரு வீடுகள் கூட இல்லை. பூஞ்சேரிமட்டம் கிராமம் வரைபடத்தில் இருந்தே காணாமல் போயுள்ளது.  பூஞ்சேரி மட்டத்தில் மக்கள் மீண்டும் குடியமர்த்தப்பட வாய்ப்பில்லை” எனக் கூறியுள்ள னர்.