திருவனந்தபுரம்:
கேரளத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில்பதிவான வாக்குகளின் அடிப்படையில் அடுத்த சில மாதங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலை மதிப்பீடு செய்தால் எல்டிஎப் 101 இடங்களிலும், யுடிஎப் 38, என்டிஏ 1 இடத்திலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் எல்டிஎப்-க்கு87,25,940 பேர் வாக்களித்துள்ளனர்.. இது 41.55 சதவிகிதமாகும். யுடிஎப்-க்கு 78,00,787 பேர் வாக்களித்துள்ளனர். இது 37.14 சதவிகிதமாகும். என்டிஏ-க்கு 30,49,186 பேர் வாக்களித்துள்ளனர். இது 14.52 சதவிகிதமாகும். கடந்த காலங்களில் எல்டிஎப், யுடிஎப் இடையிலான வாக்கு வித்தியாசம் ஒரிரு சதவிகிதங்களே இருந்துவந்த நிலையில் இம்முறை 4.41 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. சுமார்பத்து லட்சம் வாக்காளர்கள் யுடிஎப்பை விடஎல்டிஎப்புக்கு கூடுதலாக வாக்களித்துள்ளனர்.
அரசுக்கு எதிராக யுடிஎப்பும், பாஜகவும் தொடர்ச்சியாக நடத்தி வந்த பொய் பிரச்சாரங்களையும், வளர்ச்சித் திட்டங்களை சீர்குலைக்கும் முயற்சிகளையும் புறக்கணித்துகேரள வாக்காளர்கள் இடது ஜனநாயகமுன்னணியின் பக்கம் அதிக அளவில்திரும்பியிருப்பதை வாக்குப்பதிவு விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. சட்டமன்றதேர்தலுக்கான நுழைவு வாயிலில் நிற்கும்கேரளம் இடதுசாரிகளுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கும் என்பது உறுதி.