புதிய நிர்வாகிகள் தேர்வு
ஆலப்புழா எம்.சி.ஜோசபின் நகரில் நடந்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கேரள மாநில மாநாட்டில், மாநில தலைவராக சூசன் கோடியும், செயலாளராக சி.எஸ்.சுஜாதாவும் தேர்வு செய்யப்பட்டனர். இ.பத்மாவதி பொருளாளராக தேர்வு செய்யப்பட்டார். 109 பேர் கொண்ட மாநிலக் குழுவும், 37 பேர் கொண்ட நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஆலப்புழா, நவ.24- நரேந்திர மோடி அரசின் கார்ப்ப ரேட் ஆட்சி மற்றும் வகுப்புவாதத்திற்கு எதிராக புதிய விடுதலைப் போராட்டம் தேவை என்றும், அதில் பெண்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறியுள்ளார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 13-ஆவது கேரள மாநில மாநாட்டின் நிறைவுப் பொதுக்கூட்டத்தை பிருந்தா காரத் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘கார்ப்பரேட் நிறுவனங் களின் பிரதிநிதிகளால் ஒன்றிய அரசு நிர்வகிக்கப்படுகிறது. என்ன சாப்பிட வேண்டும், எப்படி வாழவேண்டும் என்று அவர்கள் கட்டளையிடுகிறார் கள். அரசியல் சட்டத்திற்கு எதிராக புல்டோசர் பயன்படுத்தப்படுகிறது. வெறுப்பு மற்றும் பிரிவினையின் வர லாற்றை உருவாக்கும் முயற்சி நடக் கிறது. சுதந்திரப் போராட்டத்தில் பெண்களும் முக்கியப் பங்காற்றிய வரலாற்றை மோடி மறந்துவிடக் கூடாது.
மோடியின் இரட்டை நிலை
விடுதலையின் 75-ஆவது ஆண்டு விழாவில், பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் குறித்து மோடி பேசினார். ஆனால், பில்கிஸ் பானு பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை குஜராத்தில் உள்ள பாஜக அரசு விடுதலைசெய்தது. பாதிக்கப்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக்களின் கடன்களையும், விவசாயி களின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மோடி அரசை அவர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால், தள்ளுபடி செய்யப்பட்டது அதானி-அம்பானிகளின் கடன்கள்தான். இந்த இரட்டை நிலைப் பாடு முடிவுக்கு வர வேண்டும். பாஜக மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் மக்கள் போராடி வரு கின்றனர். கேரளாவில் உள்ள எல்.டி.எப் அரசு மாற்றுக் கொள்கைகளுடன் முன்னேறி மக்களுக்கு நிம்மதி அளித்துள்ளது. கேரளாவிலும் வகுப்புவாத பிளவை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது. மூடநம்பிக்கைகளைப் பரப்புவதற்கு மதம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. மாந்திரீக கொலையை ஒரு தனி சம்பவம் என்று ஒதுக்கிவிடாதீர்கள். இதற்கு எதிராக பெண்கள் பதிலளிக்க வேண்டும். இருளில் இருந்து கேரளா விடுவிக்கப் பட வேண்டும்.
போலியான செய்தி
மாதர் சங்கத்தின் மாநில மாநாட்டில் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜை பிரதிநிதிகள் விமர்சித்ததாக நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி ஆதாரமற்றது. வீணா ஜார்ஜ் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து ஆகியோர் உயர் பதவி பெற்றுள் ளனர். மாநாட்டில் இருவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அவர் களின் செயல்திறனில் பெருமை கொள்கிறோம். மாதர் சங்கம் இருவருக்கும் ஆதரவாக உள்ளது’’ என்று கூறினார்.