ரூ.6000 கோடிக்கான உள்ளாட்சி திட்டங்களில்
திருவனந்தபுரம், ஜுலை 19- புதிய நிதியாண்டில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் டெண்டர் விடப்பட்ட ரூ.6,000 கோடி மதிப்பி லான பணிகளை அரசு நியமிக்கும் இளம் பொறி யாளர்கள் மேற்பார்வையிட உள்ளனர். கேர ளத்தின் இந்த புதிய முயற்சியில் வேலைவாய்ப்பு பெறஇளம் பொறியாளர்களின் பதிவு செப் டம்பரில் துவங்க உள்ளது. கிராம மற்றும் மாவட்ட பஞ்சாயத்துகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி களின் கழிவுகளை அகற்றும் திட்டங்கள் உட்பட அனைத்து பணிகளிலும் அவர்கள் ஈடுபடுவார்கள். ஊராட்சிகளில் சராசரியாக 200, ஒன்றியத்தில் 400, மாநகராட்சியில் 800, மாவட்ட பஞ்சாயத்து களில் 1000என பணியிடங்கள் இருக்கும் என மதிப் பிடப்பட்டுள்ளது. மாநகராட்சிகளும் மாவட்ட பஞ்சாயத்துகளும் பெரிய திட்டங்களில், அதிக மான பொறியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். பி.டெக், சிவில் இன்ஜினியரிங் படித்து விட்டு வேலையில்லாமல் இருப்பவர்கள், ஐடிஐ முடித்த வர்கள், பொறியியல் சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆகியோர் தகுதிக்கேற்ப பல்வேறு திட்டங்களில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பரில் பதிவு
பொறியியல் விண்ணப்பதாரர்களின் ஆன்லைன் பதிவு செப்டம்பர் மாதம் தொடங்கும். உள்ளாட்சித் துறையின் எல்எஸ்ஜிடி இணைய தளம் அல்லது ஒருங்கிணைந்த உள்ளாட்சி நிர்வாக அமைப்பு (ஐஎல்ஜிஎம்எஸ்) தளத்தில் பதிவு செய்வதற்கான சிறப்பு வசதி வழங்கப்படும். ஒவ்வொரு திட்டத்திலும் அந்தந்த பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப் படும். ஒப்பந்ததாரர் மூலம் ஊதியம் வழங்கப் பட வேண்டும். புதிய டெண்டர் நடைமுறைக ளிலும் இந்த விதிமுறை சேர்க்கப்படும்.
திருவனந்தபுரத்தில் அதிக ஐடி வேலை
கடந்த ஆண்டு நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான ஐடி வேலை வாய்ப்புக ளைப் பெற்ற நகரங்களில் திருவனந்த புரமும் இடம்பெற்றுள்ளது. உலகளாவிய ஆட் சேர்ப்பு நிறுவனமான ராண்ட்ஸ்டாட் வெளியிட்ட திறன் அறிக்கையில் திருவனந்தபுரம் இடம் பெற்றுள்ளது. நாட்டிலுள்ள 15 இரண்டாம் நிலை நகரங்களில், இடைநிலைப் பிரிவில் அதிக எண்ணிக்கையிலான தகவல் தொழில்நுட்ப வேலைகளை திருவனந்தபுரம் வழங்கி யுள்ளது. ஜூனியர் பிரிவில் நாசிக்கிற்குப் பிறகு இரண்டாவது இடத்தில் திருவனந்தபுரம் உள்ளது. எட்டு முதல்தர நகரங்களில், பெங்க ளூரு அதிக வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட Naukri.com அறிக்கையில், 2022 இல் நாட்டிலேயே அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கிய நகரம் கொச்சி. கொச்சியில் ஜனவரி முதல் மே வரை 22,365 பேர் நியமனம் பெற்றுள்ளனர். சுகாதாரத் துறை, தகவல்தொழில்நுட்பம் மற்றும் மென்பொ ருள் துறைகளில் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன. 2022 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில், 4,000 பேருக்கு மேல் வேலை வாய்ப்பு வழங்கிய நகரம் நாட்டிலேயே கொச்சி மட்டுமே யாகும். எல்.டி.எப் அரசு கடந்த 6 ஆண்டுகளில், மாநிலத்தில் உள்ள மூன்று தகவல் தொழில்நுட்ப பூங்காக்களில் 46.47 லட்சம் சதுர அடி இடம் புதிதாக கட்டப்பட்டது. இதன் மூலம் 45,869 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். திருவனந்த புரம் டெக்னோபார்க்கில் 15,000, கொச்சி இன்போ பார்க்கில் 29,700, கோழிக்கோடு சைபர் பூங்கா வில் 1169 வேலைவாய்ப்புகள் உருவாக்கப் பட்டுள்ளன. அடுத்த நான்காண்டுகளில் 63 லட்சம் சதுரஅடியில் மூன்று ஐடி பூங்காக்கள் புதிதாகக் கட்டப்படும். இதன் மூலம் 67,000 வேலை வாய்ப்புகள் உருவாகும்என எதிர்பார்க்கப் படுகிறது.