states

சங்கிகளை மீண்டும் ஏமாற்றிய கேரளா!

 ேரளாவில் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி குண்டு வெடிப்பில் 3 பேர் உயிரிழந்தனர் என  பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. “யெகோவா வின் சாட்சி” எனும் கிறித்துவ வழிபாட்டு மையத்தில் நடந்த இந்த குண்டு வெடிப்பு  பற்றிய செய்தி காட்டுத்தீ போல இந்தியா வெங்கும் பரவியது. இல்லை; பரப்பப்பட்டது. கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சியை களங்கப்படுத்த 24 மணி நேரமும் இடைவிடாமல் செயல்படும் சங் பரிவாரத்தினருக்கு வரப்பிரசாதம் போல இந்த நிகழ்வு அமைந்தது. அவர்களது சமூக ஊடகங்களும் ஆதரவு காட்சி ஊடகங்களும் வன்மத்துடன் இந்த செய்தியை மாநில அரசாங்கத்துக்கு எதிராக பரப்பின. அந்தோ பாவம்! அவர்களின் ஆசையில் மீண்டும் கேரளா மண்ணை அள்ளிப் போட்டுவிட்டது. குற்றம் நடந்த  5 மணி நேரத்தில் குற்றவாளி காவல்துறையின் பிடியில்! அவர் பெயர் மார்ட்டின். இந்த இரண்டு செய்திகளும் சங்கிக ளின் கனவில் பெரிய இடியை இறக்கிவிட்டது.

குண்டு வெடிப்புக்கு காரணம் என்ன?

“யெகோவாவின் சாட்சி” எனும் கிறித்துவ அமைப்பின் வழிபாட்டுத் தலத்தில் மக்கள் கூடியிருந்த பொழுது இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது. “யெகோவாவின் சாட்சி” என்பது ஒரு கிறித்துவ பிரிவு. உலகம் முழுவதுமே இதில்  சுமார் 85 லட்சம் பேர் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர். கிறித்துமஸ்/ ஈஸ்டர் ஆகியவற்றை கொண்டாடும் பழக்கம் இவர்களிடம் இல்லை. 

ராணுவத்தில் சேர்வது/ ரத்தம் செலுத்துதல் ஆகியவை இந்த பிரிவினர் தமக்குள் தடை செய்து கொண்டுள்ளனர். இந்தியாவில் இந்த பிரிவினர் மிகவும் குறைந்த எண்ணிக்கை யில்தான் உள்ளனர். கேரளாவில் இவர்கள் எண்ணிக்கை ஓரளவு அதிகம்!

இவர்கள் கூடியிருந்த வழிபாட்டுத் தலத்தில் குண்டு வெடித்து மூன்று பேர் மரணமடைந்தனர்.  வெடி குண்டு நடந்த இடத்தை கேரள காவல்துறை புலனாய்வு செய்த  பொழுது  அவர்களின் பல கோணங்களில் ஒன்று அந்த குழுவில் உள்ள ஒருவரே செய்திருக்கும் வாய்ப்பு உள்ளது என்பதும் இருந்தது. ஏனெனில் இந்த குழுவினரின் கூட்டத்தில் அந்நியர் ஒருவர் அவ்வளவு எளிதாக புக இயலாது. இதற்கு தகுந்தவாறு குண்டு வெடித்த சில மணி நேரங்களில் மார்ட்டின் என்பவர் காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டார். இவர் “யெகோவாவின் சாட்சி” அமைப்பின் முன்னாள் தீவிர உறுப்பி னர். 16 ஆண்டுகளாக அந்த அமைப்பின் உறுப்பினர். அவர் குண்டு வைத்ததற்கான காரணம் என்ன? அவரது முகநூல் காணொலியில் அவர் கூறியது:

“நான் 16 ஆண்டுகளாக இந்த அமைப்பின் உறுப்பினர். 2017-இல் நான் வெளியேறி னேன். இந்த அமைப்பினர் தேசவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். ராணுவத்தில் சேரக்கூடாது எனவும் அரசு வேலையில் இருக்கக் கூடாது எனவும் பிரச்சாரம் செய்கின்ற னர். இந்த அமைப்பில் உறுப்பினராக இல்லாதவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தக் கூடாது எனவும் சொல்கின்றனர். இந்த அமைப்பின் தலைமையிடம் இதனை புகார் செய்தும் பலனில்லை. எனவே இந்த காரியத்தை நான் செய்தேன்”

இதனை  ஏற்றுக்கொள்பவர்களைத் தான் உறுப்பினர் களாகச் சேர்க்கின்றனர். அவற்றை ஏற்றுக் கொண்டு 16 ஆண்டுகள் உறுப்பினராக பணி யாற்றி 2017இல் வெளியேறி இப்பொழுது குண்டு வைக்க காரணம் என்ன? இவரிடம் எப்படி குண்டுகள் கிடைத்தன? இது தனி நபர் விரோதமா அல்லது மோசமான பின்னணி உள்ளதா? இவையெல்லாம் விசாரணையில் தெரியவரும்.

சங்கிகளின் வன்மப்பிரச்சாரம்

இந்த குண்டு வெடிப்பு பற்றி கேள்விப்பட்ட வுடனே முதல்வர் பினராயி விஜயன் கட்சியின் மத்தியக் குழு கூட்டத்திலிருந்து உடனடியாக கேரளா திரும்பியது மட்டுமல்லாது அனைத்து கட்சி கூட்டத்துக்கும் அழைப்பு விடுத்தார். கட்சியின் மாநிலச் செயலாளர் கோவிந்தன் மாஸ்டரும் உடனடியாக கேரளா திரும்பினார். காவல்துறை விசாரணையை முடுக்கிவிட்டது. சில மணி நேரங்களில் அனைத்து கேரள எல்லைகளும் தீவிர கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டன. 

எனினும் கேரளா மற்றும் வெளியில் உள்ள சங்கிகள் இடது ஜனநாயக அரசை இழிவுபடுத்தவும் முஸ்லிம் சிறுபான்மை மக்களை குற்றம்சாட்டவும் இதனை ஒரு அரிய சந்தர்ப்பமாக பார்த்தனர். அவர்களது சமூக ஊடகங்கள் “தீயாக” வேலை செய்தன. அவர்களின் ஆதரவு காட்சி ஊடகங்கள் வன்மம் மிக்க கருத்தாக்கத்தை உருவாக்கின. அவற்றில் சில: 

ஸ்குவின்ட் நியான் எனப்படும் x தளம் கீழ்க்கண்டவாறு கூறியது: “யூதர்களின் கன்வென்ஷனில் குண்டு வைக்கப்பட்டது. ஒருவர் உயிரிழப்பு. பலர்  கவலைக்கிடம். நேற்று கேரளாவில் பாலஸ்தீன ஆதரவு பேரணியில் ஹமாஸ் தலைவர் ஜிகாத்துக்கு அழைப்புவிடுத்தார். இந்துக்களை யும் சியோனிஸ்ட் யூதர்களையும் கொல்ல அழைப்புவிடுத்தார். மல்லு முஸ்லிம்கள் உடனடியாக அதனை அமலாக்கிவிட்டனர்.”

இந்த பதிவில் இரண்டு பொய்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒன்று குண்டு  வைக்கப்பட்டது யூதர்களுக்காக என்பது.  இரண்டு குண்டு வைத்தது கேரளா முஸ் லிம்கள். மேலும் ஹமாஸ்  அமைப்பின் ஜிகாத் அழைப்புக்கு இணங்க  இது செய்யப்பட்டது எனவும் வன்மம் கக்குகின்றனர். மேஜர் சுரேந்திர புன்யா என்பவர் கீழ்க்கண்டவாறு பதிவுபோட்டார்:

“நேற்று ஹமாஸ் பயங்கரவாதி கலேத் மாஷல் கத்தாரிலிருந்து கேரளாவில் ஒரு  கூட்டத்தில் ஜிகாத்துக்கு தயாராகி இந்திய வீதிகளில் இறங்குங்கள் என்றார். இன்று  4 இடங்களில் குண்டு வெடிப்பு. கொச்சியில்  யூதர்கள் தாக்கப்பட்டனர். இது ஒருங்கிணைக்க ப்பட்ட குண்டு வெடிப்பு நிகழ்வுகள். இன்று யூதர்கள்; நாளை மற்றவர்கள். பாரதமே விழித்துக் கொள்”

இந்த பதிவும் யூதர்கள் தாக்கப்பட்டனர் எனவும் அதனை செய்தது முஸ்லிம்கள் எனவும் ஹமாஸ் தூண்டுதலின் பெயரில் இது செய்யப்பட்டது எனவும் பொய்யான கருத்தை உருவாக்க முயல்கிறது. மேலும் யூதர்கள் மட்டுமல்ல; இந்துக்கள் உட்பட மற்றவர்களும் தாக்கப்படுவார்கள் எனவும் பீதியை கிளப்ப முயல்கிறது.

கேரளா டி.ஜி.பி. பத்திரிகைகளுக்கு உடனடி யாக ஒரு பேட்டி கொடுத்தார். அதில் இந்த குண்டு வெடிப்பு IED எனப்படும் பிரிவை சேர்ந்தது என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது எனவும் புலன் விசாரணை தொடர்கிறது எனவும் மலையாளத்தில் கூறினார். இதனை ஸ்குவின்ட் நியான் பதிவு கீழ்க்கண்டவாறு மொழியாக்கம் என கூறியது:

“எங்களால் பயங்கரவாதிகளை பிடிக்க இயலவில்லை. எனவே யாரெல்லாம் இதனை பயங்கரவாத செயல் என கூறுகின்றனரோ அவர்களை கைது செய்வோம்”

கேரளா காவல்துறையை இழிவுபடுத்தும் செயல் இது! சின்கா எனும் சங்கி கீழ்க்கண்ட வாறு பதிவு போட்டார்:

“கேரளாவை சிரியாவாக மாறாமல் தடுக்க ஒரே வழி ஜனாதிபதி ஆட்சி அமலாக்குவதும் கேரளாவை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதும்தான்!”

ஏதோ சில பெயர் தெரியாத சங்கிகள் கூறு
வது என்பது அல்ல; பொறுப்பான பதவியில் இருக்கும் பா.ஜ.க. தலைவர்களும் இதே பாணியில் பொய்களை அள்ளித் தெளித்தனர். கேரளாவின் பா.ஜ.க. தலைவர் சுரேந்திரன், பினராயி ஆட்சியில் மாநிலம் முழுதும் குண்டு வெடிப்புகள் நடப்பதாக ஒரு பெரும் பொய்யை கூறினார்.

மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் கீழ்க்கண்டவாறு x தளத்தில் பதிவு செய்தார்:

“ஊழல் குற்றச்சாட்டுகளில் மூழ்கியுள்ள, இழிவுக்கு ஆளாகியுள்ள ஒரு முதல்வரின் அசிங்கமான வெட்கக்கேடான முஸ்லிம்களை தாஜா செய்யும் அரசியல் காரணமாக இந்த குண்டுவெடிப்பு. இஸ்ரேலுக்கு எதிராக தில்லியில் தர்ணாவில் அவர் உட்கார்ந்து கொண்டுள்ளார். கேரளாவில் பயங்கரவாத ஹமாஸ் அமைப்பின் ஜிகாத் அழைப்புக்கு இணங்க குண்டு வெடிப்பில் அப்பாவி கிறித்துவர்கள் உயிரிழப்பு”

இந்த பா.ஜ.க. தலைவர்களும் குண்டு வைத்தது முஸ்லிம்கள்தான் எனும் ஆதார
மில்லாத முடிவின் அடிப்படையில் தோழர் பினராயி விஜயன் அவர்களை தனிப்பட்ட முறை
யிலும் அவர் தலைமை தாங்கும் அரசாங்கம் மீதும் அவதூறுகளை அள்ளி வீசினர். இவர்களில் எவரும் மணிப்பூர் படுகொலைகள் குறித்து ஒரு பதிவும் போடவில்லை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

சச்சின் தெண்டுல்கரின் திடீர் பாசம்!

கேரளா குண்டு வெடிப்பில் உயிரிழந்த வர்கள் மற்றும் காயம் அடைந்தவர்கள் மீது சச்சினுக்கு திடீர் பாசம் உருவானது. அவர் தனது பதிவில் கூறினார்:

“கேரளா குண்டு வெடிப்பு ஆழமான வேதனையை உருவாக்கியது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனுதாபங்கள். காய மடைந்தவர்கள் குணமாக பிரார்த்திக்கிறேன்”

சச்சினின் மனிதாபிமானம் மெச்சத்தகுந்த துதான்! பிரச்சனை என்னவெனில் ஏன் இந்த பாசம் மணிப்பூரில் இறந்தவர்கள் மீது வர வில்லை? சக விளையாட்டு வீராங்கனைகள் பாலியல் குற்றம்சாட்டி போராடினரே அப்பொ ழுது எங்கே போயிற்று, இந்த பாசம்? கொத்துக் கொத்தாக பாலஸ்தீன குழந்தைகள் கொல்லப்படுகின்றனரே! ஏன் சச்சினின் இதயம் வருந்தவில்லை? சச்சினின் அனுதாபம் பாஜக அரசின் கண்ணசைவில்தான் செயல்படும் என்பது மிகவும் கேவலமானது! விளையாட்டில் உச்சத்தை சாதித்தவர்களும் மனிதத்தில் பாரபட்சம் காட்டினால் அந்த சாதனைக்கு எந்த மதிப்பும் இல்லை.

இவர்களின் எதிர்பார்ப்பிலும் வன்மத்திலும் மண்ணை அள்ளிப் போடும் வகையில் மார்ட்டி னின் கைதும் வாக்கு மூலமும் அமைந்து விட்டது. தீவிர விசாரணை எத்தகைய உண்மை களை வெளிக்கொணரும் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்று! ஆனால் யோசித்துப் பாருங்கள்! ஒரு வேளை மார்ட்டின் எனும் பெயருக்குப் பதிலாக ஒரு முஸ்லிம் பெயர் இருந்திருந்தால்? எத்தகைய பிரச்சாரம் நடந்திருக்கும்? எனினும் சங்கி களின் வன்மப் பொய்ப் பிரச்சாரங்கள் ஓயப்போவது இல்லை. தமது அரசியல் ஆதாயத்துக்காக எத்தகைய நீசத்தனத்தையும் செய்ய அவர்கள் தயங்கமாட்டார்கள். கேரளா நிகழ்வுகள் அத்தகைய எச்சரிக்கையை மீண்டும் உணர்த்துகிறது எனில் மிகை அல்ல. - அ.அன்வர் உசேன்