states

img

உணவு மானியத்தில் பிடித்தம் செய்வதாக கேரளத்துக்கு ஒன்றிய அரசின் மிரட்டல்

நவ.26- கேரளத்தில் 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட  பெருவெள்ளத்தின் போது வழங்கப்பட்ட இலவச அரிசிக்கு விலை கோரியது ஒன்றிய அரசு. அதற்கான ரூ.205.81 கோடியை உடனடியாக வழங்கவில்லை என்றால், மாநிலத்துக்கான பேரிடர் நிவாரண நிதி யில் இருந்து அல்லது அரசுக்கு  வழங்க  வேண்டிய உணவு மானியத்தில் இருந்து  எடுக்கப்படும் என மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது. 2018 வெள்ளத்தின் போது ரேசன் கடை மூலம் விநியோகிக்கப்பட்ட 89,540 மெட்ரிக் டன் அரிசியின் விலையை கந்துவட்டி க்காரர்களைப் போல கைப்பற்றும் முயற்சியில் ஒன்றிய அரசு இறங்கியுள் ளது. அதையொட்டி அரிசிக்கான பணத்தை  செலுத்துவதற்கான கோப்பில் முதல்வர்  பினராயி விஜயன் கையெழுத்திட்டார். ஒன்றிய அரசு கடன் ஒதுக்கீட்டைக் குறைத்த தால், நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மாநிலத்தை மேலும் சிரமத்துக்கு உள்ளாக்க வேண்டும் என்பதே அரிசிக்கான பணத்தை பிடித்து பறிப்பதற்கானகாரணம்.

2018இல் கேரளம், எப்சிஐயிடம் இருந்து அரிசியை வாங்கியது. இரண்டு வெள்ளம் ஏற்பட்டதில் நிதி நெருக்கடி காரணமாக அதற் கான தொகையை தள்ளுபடி செய்யக் கோரி கேரளா அனுப்பிய கடிதத்தை  ஒன்றிய அரசு பரிசீலிக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடிக்கும் முதல்வர் நேரில் கடிதம் கொடுத்தார். பணம் தராவிட்டால் பேரிடர் நிவாரண நிதி அல்லது உணவு மானியத்தில் இருந்து எடுக்கப்படும் என பதில் வந்தது. மத்திய உணவுத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், பணம் செலுத்துவதில் எந்த தளர்வும் இல்லை என்று முதல்வரிடம் தெரிவித்தார். மாநிலத்தின் பேரிடர் நிவா ரண நிதியில் 75 சதவிகிதம் ஒன்றியத்திடம் இருந்து வருகிறது.

கேரளாவுக்கு  உணவு மானியம் கிடைக்காவிட்டால் ஒரு கிலோ அரிசிக்கு ரூ.25கொடுக்க வேண்டும். ரேசன் விநியோகத்திற்காக ஆண்டுதோறும் 7.5 லட்சம் மெட்ரிக் டன் அரிசி ஒன்றியத்தில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. பா.ஜ.க ஆளும் மாநிலங் களுக்கு கேட்காமலேயே பணத்தை வழங்கிய ஒன்றிய அரசு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிடம் இரக்க மற்ற அணுகுமுறையை கடந்த காலங்களி லும் கடைப்பிடித்தது. மீட்புப் பணியில் பயன்படுத்திய  ஹெலிகாப்டருக்குகூட பணம் கேட்டது. கடன் ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு குறைத்துள்ளதால், நிதி  நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மாநிலத்தை மேலும் நெருக்கடியில் தள்ளும் அணுகுமுறையை ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ளது.