அகமதாபாத், நவ.21- குஜராத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. பாஜக,காங்கிரஸ், ஆம் ஆத்மி என மூன்று கட்சிகள் களத்தில் உள்ள நிலையில், அங்கு மும்முனை போட்டி உருவாகியுள்ளது. கடந்த காலங்களை போல் அல்லாமல் தற்போது பாஜகவிற்கு எதிராக குஜராத்தில் கடும் எதிர்ப்பு அலை கிளம்பியுள் ளது. அதாவது மோடி பிரதமராக வருவதற்கு பயன்படுத்தப்பட்ட முக்கிய வார்த்தையான “குஜராத் மாடலின்” உண்மை நிலைகள் ஒவ்வொன்றாக சமூக வலைத்தளங்கள் அம்பலப்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு அம்பலப்படுத்தப்பட்டு வரும் நிகழ்வுகளுக்கு ஏற்ப அவ்வப்போது புதிய ஹேஸ்டேக்குகள் டிரெண்ட் ஆகி வருகிறது. வாக்குப்பதிவு நடை பெற இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், மோடியின் குஜராத் மாடலுக்கு எதிராக “2சி மாடல் ஆப் குஜராத்( #2CModelOfGujarat) என்ற பெயரில் புதிய ஹேஸ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது.
இந்த ஹேஸ்டேக் 4 முக்கியமான கருத்துக் களை வைத்து டிரெண்ட் செய்யப்பட்டு வரு கிறது. குஜராத்தில் 1.7000 அரசு பள்ளிகளை இழுத்து மூடியது, நவ்சாரி வேளாண் பல்க லைக்கழகத்திற்கு சொந்தமான நிலத்தில் தனி யார் ஹோட்டல் கட்டப்பட்டது, கடந்த 3 ஆண்டு களில் அதானி துறைமுகங்கள் மூலம் ரூ.5222 கோடி மதிப்புள்ள 1044 கிலோ போதைப் பொருள் கடத்தி பிடிபட்டது. ரூ.800 கொடுத்து குடிதண்ணீர் பெறுவது போன்ற விஷயங்களை முன்வைத்து ஹேஸ்டேக் டிரெண்ட் செய்யப் பட்டு வருகிறது. இது போக மோர்பி பாலம் உள்ளிட்ட அடிப் படை பிரச்சனைகள் பலவும் “2சி மாடல் ஆப் குஜராத்( #2CModelOfGujarat)” ஹேஸ்டேக் கில் பதிவாகி வருகிறது. குறுகிய காலத்தில் பல ஆயிரம் ஹேஸ்டேக்குகள் டிரெண்ட் ஆன தால் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.