குஜராத்தில் மனைவியின் பெயரை, நாய்க்கு வைத்த பக்கத்துவீட்டுப் பெண் மீது, ஆத்திரமடைந்த கணவர் தீவைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலம் பாவ்நகரைச் சேர்ந்த நீத்தாபென் (35), தனது வீட்டு செல்ல நாய்க்கு சோனு என்று பெயர் வைத்துள்ளார். இது, அவரது அண்டை வீட்டைச் சேர்ந்த பர்வாத் என்பவரின் மனைவியின் பெயர். இந்த நிலையில், திங்கள்கிழமை, நீத்தாபென்னின் கணவரும் பிள்ளைகளும் வெளியில் சென்றிருந்தனர். அப்போது பர்வாத் மற்றும் ஐந்து பேர் நீத்தாபென் வீட்டுக்கு வந்து, தனது மனைவியின் பெயரை, நாய்க்கு வைத்ததைக் கண்டித்துள்ளார்.
இதையடுத்து , வாக்குவாதம் ஏற்பட்டது, அந்த கும்பல், நீத்தாபென் மீது மண்ணென்ணெயை ஊற்றி தீ வைத்துக் எரித்தனர். நீத்தாபென்னின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினரும், அவரது கணவரும் தீயை அணைத்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இரு குடும்பத்துக்கும் ஏற்கனவே தண்ணீர் பிரச்சனையில் சண்டை இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.