states

குஜராத்: கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து - 5 பேர் பலி

குஜராத்தில் கொரோனா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சிவானந்த் கொரோனா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்நிலையல்  வியாழனன்று இரவு எதிர்பாராத விதமாக தீ விபத்து எற்பட்டது. இந்த தீ விபத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 
இந்நிலையில் தீ விபத்துக்கான காரணம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாக வில்லை.
 

;