குஜராத்தில் காது கேட்காத வாய் பேச முடியாத பெண் கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தானிலிருந்து புலம் பெயர்ந்த மாற்றுத்திறனாளி பெண் குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் தனது 5 வயது மகன் மற்றும் கணவருடன் குடிபெயர்ந்து வசித்து வந்தார். அப்போது அந்த பகுதியில் இருந்த 4 பேர் பலமுறை அந்த மாற்று திறனாளி பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ஒருகட்டத்தில் இந்த தகவலை 5 வயது சிறுவன் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் பாதிக்கப்பட்ட பெண்ணை ஊரை விட்டு காலி செய்யுமாறு மிரட்டி உள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மீண்டும் ராஜஸ்தானுக்கே சென்றுள்ளனர். இந்நிலையில் பெண்ணின் கணவர் ஜீரோ எஃப் ஐ ஆர் விதியின் கீழ் ராஜஸ்தான் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில் மாற்றுத்திறனாளி பெண் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.