அகமதாபாத், நவ.13- 2002 குஜராத் இனப்படுகொலையின் போது நரோதாபத்யாவில் 97 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட வழக்கில் தண்டனை பெற்ற மனோஜ் குக்ரானியின் மகள் பயல் குக்ரானிக்கு தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பளித்துள்ளது. 1990 முதல் பாஜக வசம் உள்ள நரோடா தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ பல்ராம் தவானியை தவிர்த்துவிட்டு போட்டியிடும் வாய்ப்பு குக்ரானி குடும்பத்திற்கு வழங்கப் பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில், இனப்படு கொலை வழக்கில் மனோஜ் குக்ரானி மற்றும் 15 பேர் மீதான தண்டனையை குஜராத் உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. குக்ரா னிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளார்.