states

img

“குஜராத் சாலைக்கு தோழர் தல்பத் பெயர்”

குஜராத் மாநிலத்தின் ராஜ் கோட் பகுதியில் உள்ள உப்  லேதா நகராட்சியில் சாலை ஒன்றிற்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான தல்பத்  நிரஞ்சனியின் பெயர் சூட்டப்பட்டுள் ளது. தல்பத் நிரஞ்சன் 1950களில் மகா குஜராத் போராட்டம் நடந்தபோது அதில் தீவிரமாகப் பங்கேற்று சிறை யில் அடைக்கப்பட்டார். குஜராத்தில் விவசாய சங்கத்தைக் கட்டுவதில் முன் னின்று பணியாற்றினார். குறிப்பாக, ராஜ்கோட் பகுதியில் உள்ள உப்லேதா நகராட்சியில் தொடர்ந்து வெற்றி பெற்று உறுப்பினராகப் பணியாற்றிய காலத்  தில் உழைக்கும் மக்களின் நலன்க ளுக்காக பல்வேறு திட்டங்களைப் பெற்றுத் தந்தார்.  அரசியல் கட்சிகளைத் தாண்டி அவ ருக்கு செல்வாக்கு இருந்தது. அண்மை யில், உப்லேதாவில் குஜராத் மாநில  விவசாயிகள் சங்க மாநாடு நடந்தது. 2017 ஆம் ஆண்டு 19 ஆயிரமாக இருந்த விவசாயிகள் சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது 50 ஆயிரத்து  198 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில  ஆண்டுகளில் நடைபெற்ற விவசாயி களுக்கான போராட்டம் காரணமாக, ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள். மாநாடு நடக்கும் சமயத்தில், உப்லேதா நகரத்தின் முக்கியமான சாலை ஒன்றிற்கு மறைந்த மக்கள் தலைவர் தல்பத் நிரஞ்சனியின் பெயர் சூட்டப்பட்டது. நகராட்சியின் தலைவர் மயூர் சுவா தலைமையில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் அகில இந்திய விவசாயி கள் சங்கத்தின் தலைவர்  டாக்டர் அசோக் தவாலே பெயர்ப்பலகையைத் திறந்துவைத்தார்.