states

img

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருகை: துணியால் மறைக்கப்பட்ட குஜராத்தின் குடிசை பகுதி

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் குஜராத் வருகை தந்ததை முன்னிட்டு குஜராத்தின் குடிசை பகுதிகள் துணியால் மறைக்கப்பட்டிருந்தது  பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

2 நாள் பயணமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் முதல் முறையாக இந்தியா வந்துள்ளார். இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும்.

இங்கிலாந்தில் இருந்து தனி விமானம் மூலம் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அவர் வந்தார். குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு வந்து பார்வையிட்டார்.

2 நாள் பயணமாக வந்துள்ள போரிஸ் ஜான்சன் நாளை பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

முன்னதாக, போரிஸ் ஜான்சன் குஜராத் வருவதை முன்னிட்டு அவரது கண்ணில் படாதவாறு குஜராத்தின் குடிசை பகுதிகள் பெரிய துணி கட்டி மறைக்கப்பட்டிருந்தது. இதேபோல் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் குஜராத்திற்கு வருகை தந்த போது குஜராத்தின் குடிசை மற்றும் சேரி பகுதிகள் சுவர் கட்டி மறைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது குஜராத் வளர்கிறது. பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து உள்ளது. இந்தியாவிற்கே குஜராத் மாடல் தான் தேவை என்று பிரச்சாரம் செய்தார். ஆனால் குஜராத்தின் வளர்ச்சி துணி கட்டி மறைக்கும் அளவிற்கு தான் உள்ளது என்று சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.