states

img

கங்கணம் கட்டி விரட்டியடிக்கும் ராஜபுத்திரர்கள் குஜராத்தில் பாஜக பிரச்சாரங்கள் ரத்து

குஜராத், ராஜஸ்தான், உத்தர கண்ட், உத்தரப்பிரதே சம், ஹரியானா, தில்லி, பஞ்சாப், மத்தியப்பிரதேசம், பீகார், ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப்பிர தேசம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா என 14 மாநிலங்களில் கிட்டத்தட்ட 22 கோடி அளவில் ராஜபுத்திரர் கள் வசித்து வருகின்றனர். வடமாநி லங்களில் ராஜபுத்திரர்களை வைத்து பாஜக அரசியல் ஆதாயம் பெற்று வந்த சூழலில், கடந்த மார்ச்  மாதம் ராஜபுத்திர மன்னர்கள் இஸ் லாமியர்களுடன் நெருக்கமாக அடிமை போல வாழ்ந்ததாகவும், தங்கள் பெண்களை இஸ்லாமியர் களுக்கு திருமணம் முடித்து, அதற்கு பதிலாக இஸ்லாமிய மன் னர்கள் கொடுத்ததை வைத்து ஆட்சி செய்ததாகவும் பாஜக மூத்த தலைவரும், ஒன்றிய அமைச்ச ருமான பர்ஷோத்தம் ரூபாலா பிரச் சாரப் பொதுக்கூட்டத்தில் பேசினார். 

இதற்கு ராஜபுத்திர வம்ச மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து குஜராத் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்திய நிலையில், சில இடங்களில் ராஜபுத்திர பெண் கள் தீக்குளிக்கவும் முயன்றனர். உத்தரப்பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் பிரம்மாண்ட மகா பஞ்சாயத்துக் கூட்டம் நடத்தி, அக்கூட்டங்களில் பாஜகவிற்கு வாக்களிக்க மாட்டோம் என உறுதி மொழி ஏற்றனர். இதுபோக குஜ ராத், உத்தரப்பிரதேசம் மாநிலங்க ளில் பாஜகவினரின் பிரச்சாரக் கூட் டத்தில் ராஜபுத்திரர்கள் தாக்குதல் நடத்தி, பாஜக வேட்பாளர்களை வந்த வழியிலேயே ஓட்டம் பிடிக்க வைத்தனர். இந்த சம்பவங்கள் போல ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் பாஜக வேட்பாளர்கள் ராஜபுத்திரர்களால் துரத்தப்பட்டு வருகின்றனர். ஆனால் இந்த எதிர்ப்பு அலை சம்ப வங்களை தங்களுக்கு ஆதரவாக உள்ள “கோடி மீடியா” ஊடகங் கள் மூலம் பாஜக மறைத்து வரு கிறது.

பிரச்சாரம் ரத்து
இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் முக்கிய மக்களவை தொகுதிகளுள் ஒன்றான ஜாம்நக ரின் பாஜக வேட்பாளரான பூனம் பென் பிரச்சாரம் செய்த இடத்தில் ராஜபுத்திரர்கள் கோஷங்களை எழுப்பி, பாஜக கொடியை அகற்றி பெரும் போராட்டத்தில் ஈடுபட்ட னர். பிரச்சார மேடையின் பின்புறத் தின் வழியாக பூனம்பென் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடினார். இதேபோல பாரூச் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் மன சுக்பாய் வாசவாவையும் ராஜபுத்தி ரர்கள் பிரச்சாரம் செய்ய விடாமல் விரட்டியடித்துள்ளனர். ராஜபுத்தி ரர்களின் தொடர் போராட்டங்க ளால் பாஜக வேட்பாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து வருகின்றனர். இதைய டுத்து ராஜபுத்திரர்கள் பெரும்பான் மையாக வசிக்கும் ஜாம்நகர், பாவ்நகர், பாரூச் உள்ளிட்ட 7 மக்க ளவை தொகுதிகளில் பாஜக தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்துள்ளது.

விவசாயிகள் - ஜாட் - 
ராஜபுத்திரர்கள் கைகோர்க்க வாய்ப்பு

கடும் பின்விளைவுகளை எதிர்கொள்ளும் சூழலில் பாஜக

சாதாரண கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி 2 முறை போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது மோடி அரசு  அடக்குமுறையை ஏவி தாக்குதல் நடத்தியது. இதனால் கடும் கோபத்தில் உள்ள விவசாயிகள் ஹரியானா, பஞ்சாப் மற்றும் தில்லி எல்லைப் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள வரும் பாஜக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த வழியிலேயே துரத்தி அனுப்பி வருகின்றனர். இதே போல குஜராத், உத்தரப்பிரதேச மாநிலத்தில் ராஜபுத்திரர்கள் பாஜகவினரை விரட்டியடித்து வருகின்றனர். பாஜகவின் இழிவான அரசியல் சூழ்ச்சிக்கு எதிராக ஜாட் மக்களும் களமிறங்கியுள்ள நிலையில், ஜாட் மக்கள் விவசாயிகள், ராஜபுத்திரர்களுடன் இணைந்து பாஜகவிற்கு எதிரான எதிர்ப்பு போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு விவசாயிகள் - ஜாட் - ராஜபுத்திரர்கள் கைகோர்த்தால் வடமாநிலங்களில் பாஜக இதுவரை இல்லாத வகையில் கடுமையான பின்விளைவுகளை எதிர்கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.