states

img

குளிர்பானத்தில் பல்லி - மன்னிப்பு கோரிய மெக்டொனால்டு

குஜராத்தில் மெக்டொனால்டு கடையில் குளிர்பானத்தில் பல்லி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் செயல்பட்டு வரும் ஒரு மெக்டொனால்டு கடையில் இருவர் கோக் குடித்துக் கொண்டிருந்த போது ஒரு பல்லி அந்த பானத்தில் இருந்ததை கண்டனர். 
உடனடியாக வாடிக்கையாளரான பார்கவா ஜோஷி, அதனை படமெடுத்து இதுகுறித்த வீடியோவை தனது டுவிட்டரில் பதிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. 
தொடர்ந்து அவர் இது குறித்து மெக்டொனால்டு மேலாளரிடம் புகார் அளித்தார். ஆனால் அவர் இது குறித்து அதிக கவனம் செலுத்தவில்லை என்றும் வேண்டுமானால், செலுத்திய பணம் திருப்பி தரப்படும் என மேலாளர் தெரிவித்ததாக ஜோஷி குற்றம் சாட்டினார். 
இதனை தொடர்ந்து, அகமதாபாத் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தி, கடைக்கு சீல் வைத்தனர். மேலும், குளிர்பானத்தின் மாதிரியை எடுத்து பொது சுகாதார ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். 
இதைத்தொடர்ந்து மெக்டொனால்டு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது. அதில் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை தங்கள் நிறுவனம் மதிப்பதாகவும் இது போன்ற செயலுக்கு மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளது

;