தெலுங்கானா தேர்தல் தொடர்பாக “டிவி 9 தெலுங்கு” என்ற தனி யார் செய்தி நிறுவனம் 5 பத்திரி கையாளர்கள் கொண்ட அமர்வை அமைத்து நடிகரும், அரசியல் விமர்சகரு மான பிரகாஷ்ராஜிடம் நேர்காணல் எடுத்தது. இந்த நேர்காண லில் என்டிடிவி பத்தி ரிகையாளர்,”நீங்களும், நடிகர் கமல் ஹாசனும் மிகச்சிறந்த நடிகர்களாக இருந்தும் அரசியலில் தோற்று இருக்கி றீர்கள். அப்படியென்றால் உங்களை விட சிறந்த நடிகர்கள் அரசியலில் இருக்கிறார் களா?” என கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு சிறிதும் தாமதிக்காமல் பிர காஷ்ராஜ்,“மோடி இருக்கிறார்” எனக் கூறினார். இதுகுறித்து மேலும் அவர் கூறு கையில்,”மோடி சிறந்த நடிகர், மிகச் சிறந்த பேச்சாளர். அவர் தனக்காக மிகச் சிறந்த ஆடை வடிவமைப்பாளர், சிகை அலங்கார வடிவமைப்பாளர் என எல்லா வற்றையும் வைத்திருக்கிறார்” என கூறி னார். பிரகாஷ்ராஜின் இந்த அதிரடி பதி லால் வாயடைத்துப் போன 5 பத்திரிகை யாளர்களும் மேற்கொண்டு கேள்வி கேட்காமல் சிறிது நேரம் அமைதியாக இருந்தனர். இந்த வீடியோ கிளிப் தேசிய அளவில் டாப் டிரெண்டிங்கில் வலம் வரு வதால் பாஜகவினர் அதிர்ச்சியில் உறைந் துள்ளனர்.