states

img

பெங்களூருவில் அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!

பெங்களூருவில்  அரசுப்பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு மெட்ரோ போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்பட்ட பேருந்து இன்று காலை 9 மணியளவில் மாநகரின் எம்.ஜி. சாலையில் அனில் கும்ப்ளே வளைவுப் பகுதியில் சென்று கொண்டிருந்தது.

அப்போது பேருந்தின் இன்ஜினில் இருந்து தீ பற்றத் தொடங்கியது. பின்னர், வேகமாக வாகனம் முழுவதும் தீ பரவியது. பேருந்தின் முன்பக்கத்திலிருந்து புகை வருவதை கண்ட பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.  உடனடியாக பயணிகள் வாகனத்தை விட்டுக் கீழே இறங்கிச் சென்றனர். இதனால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.  

பேருந்தில் சுமார் 30 பேர் பயணித்த நிலையில் அவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.